பக்காவான படிப்புக்கு மட்டுமல்ல பாதுகாப்புக்கும் ! -- இன்ஷூரன்ஸ்
Money Money Money பக்காவான படிப்புக்கு மட்டுமல்ல பாதுகாப்புக்கும் ! பணத்தைப் பெருக்கும் மந்திரத் தொடர் ஒரு ந...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_7790.html
Money Money Money
பக்காவான
படிப்புக்கு மட்டுமல்ல பாதுகாப்புக்கும் !
பணத்தைப் பெருக்கும் மந்திரத் தொடர்
ஆம்... குழந்தைகளுக்கான இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது என்பது, அந்தக் குழந்தையின் பெயரில் எடுப்பது அல்ல. குழந்தையின் காப்பாளரான அப்பா, அம்மா, சட்டப்படியான காப்பாளரின் பெயரில் எடுப்பதுதான்.
பெரும்பாலான பெற்றோர், குழந்தைகளுக்காக பல பாலிசிகள் எடுக்கிறார்கள். குறிப்பாக, யூலிப் பாலிசிகளைத்தான் அதிக பெற்றோர் எடுத்து வைத்திருக்கிறார்கள். 'யூலிப் பாலிசி' என்பது இன்ஷூரன்ஸ் உடன் கூடிய பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் திட்டம். இதில் சந்தை ஏற்ற, இறக்கத்தைப் பொறுத்துதான் வருமானம் கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலத்துக்காக போடும் பணம் என்பதால், இதுபோன்ற ரிஸ்க் பாலிசிகளில் பணத்தைப் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. மாறாக... நிலையான, பாதுகாப்பான பாலிசிகள் எடுக்கலாம். அவற்றுள் சிறந்த இரண்டை இங்கே பரிந்துரைக் கிறேன்.
ஜீவன் அன்கூர்
எல்.ஐ.சி-யின் 'ஜீவன் அன்கூர்’ திட்டம், குழந்தைகளின் எதிர்காலத்துக்கு எடுக்கப்படும் பாசிலிகளில் சிறந்தது. இந்தப் பாலிசி குழந்தையின் படிப்பு மற்றும் எதிர்கால தேவைக்குப் பயன்படும். பிறந்த குழந்தை முதல் 17 வயது வரை இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த பாலிசியை எடுக்க முடியும். குழந்தையின் பெற்றோர், அதாவது அப்பா/அம்மாதான் பாலிசிதாரராகக் கருதப்படுவார். குழந்தை நாமினியாகக் கருதப்படும். குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் முதல் காப்பீடு செய்துகொள்ளலாம். உங்களின் பிரீமியம் கட்டும் திறனைப் பொறுத்து இந்தத் தொகையை அதிகப்படுத்திக் கொள்ளலாம். பாலிசி முதிர்வு காலத்தில்... முதிர்வுத் தொகை, போனஸ் மற்றும் லாயலிட்டி அடிஷன் தொகை ஆகியவை கிடைக்கும். பாலிசிதாரர், அதாவது குழந்தையின் பெற்றோர் இறந்துவிட்டால், மேற்கொண்டு பணம் கட்டத் தேவையில்லை. முதிர்வுத் தொகை உடனடியாக குழந்தைக்கு வழங்கப்படும். மேலும், முதிர்வுத் தொகையில் பத்து சதவிகிதம், பாலிசி காலம் முடியும் வரை ஆண்டுதோறும் குழந்தைக்கு வழங்கப்படும். ஒருவேளை ஏதாவது அசம்பாவிதத்தால் குழந்தை இறக்க நேரிட்டால், இந்தப் பாலிசியை அடுத்து இருக்கும் குழந்தையின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம். அப்படி மாற்றிக் கொள்ளும்போது, இந்த பாலிசியின் மூலம் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் தவறாமல் கிடைக்கும். வேறு குழந்தை இல்லை எனில், சட்டப்படியான வாரிசுகளுக்கு இந்தப் பாலிசியை மாற்றிக் கொள்ளலாம்.எஸ்.பி.ஐ. லைஃப் ஸ்காலர்
பதினைந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்தப் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். பாலிசி தொகை ஐம்பதாயிரம் ரூபாய் முதல் ஒரு கோடி வரை. உங்களால் கட்ட முடிந்த பிரீமியத் தொகைக்கு பாலிசி எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசி எடுக்கப்பட்ட குழந்தையின் 18, 19, 20 மற்றும் 21 வயது ஆகிய நான்கு வருடமும் பாலிசி தொகையில் 25% தொகையைக் கொடுப்பார்கள். அதாவது, நீங்கள் எடுக்கும் பாலிசி தொகை ஒரு லட்சம் எனில், தலா 25,000 ரூபாய் என நான்கு தவணைகளில் கொடுப்பார்கள். அதிலும் 21 வயதில் கொடுக்கும் தொகைக்கு கூடுதலாக போனஸ் தொகையும் கிடைக்கும். பாலிசி முதிர்வுறும் காலத்தில்... முதிர்வுத் தொகை மற்றும் போனஸ் ஆகியவை கிடைக்கும். ஒருவேளை பாலிசி காலத்தில், அதை எடுத்த பெற்றோர் இறக்க நேரிட்டால்... மேற்கொண்டு பணம் கட்டத் தேவையில்லை. அதேசமயம், போனஸுடன் கூடிய பாலிசித் தொகையை உடனடியாகக் கொடுப்பதுடன் பாலிசித் தொகையில் 25% தொகையை நான்கு தவணைகளில் குழந்தையின் 18, 19, 20, 21 வயதுகளில் கொடுப் பார்கள். அந்தக் குழந்தையின் எதிர்கால படிப்புச் செலவுக்கு இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.இதுபோன்ற பாலிசிகள்... குழந்தையின் எதிர் காலத்துக்காக முன்கூட்டியே பணம் சேர்க்க வாய்ப்பாக இருப்பது மட்டுமல்லாமல், ஒருவேளை பெற்றோருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும்போது அக்குழந்தையின் எதிர்காலத்துக்கு அச்சுறுத் தல் இல்லாமல், பெற்றோர் உயிருடன் இருக்கும்போது எப்படிச் செய்வார்களோ அதேபோன்று பொருளாதாரப் பாதுகாப்பு கிடைக்கப் பெறலாம்.
கட்டாயமாக எடுங்கள் குழந்தைகளுக்கான பாலிசி!
- பணம் பெருகும்...
பலன் தரும் ஃபண்ட்!
குழந்தைகளின் எதிர்காலத்துக்காக 'சைல்டு கேர் பிளான்' மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். குழந்தை பிறந்தவுடனே அதன் பெயரில், மியூச்சுவல் ஃபண்ட் மூலம் மாதம் 1,000, 2,000 ரூபாய் என பதினைந்து, இருபது வருடங்கள் என்று உங்கள் வசதியைப் பொறுத்து முதலீடு செய்யலாம். குழந்தை வளர வளர உங்கள் முதலீடும் வளர்ந்து கொண்டே இருக்கும். படிப்பு அல்லது திருமணம் போன்ற தேவைகளுக்கு அது மிகவும் உதவியாக இருக்கும்.
குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் மாதம் 100 ரூபாயைக் கூட தபால் நிலைய 'ஆர்.டி.' மூலம் சேமித்து வரலாம். தேவைப்பட்டால், இதில் கிடைக்கும் முதிர்வுத் தொகையை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து, குழந்தையின் எதிர்கால தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
Post a Comment