கூந்தல் அழகிற்கு மூலிகை ஆலோசனைகள்--ஹெல்த் ஸ்பெஷல்,
• நல்லெண்ணெய் மற்றும் நெல்லிக்காய் சாறு இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து காய்ச்சி, வடிகட்டித் தேய்த்துக் குளித்து வந்தால் இளநரை மறைந்...
https://pettagum.blogspot.com/2012/07/blog-post_5695.html
• நல்லெண்ணெய் மற்றும் நெல்லிக்காய் சாறு இரண்டையும் சம அளவு
எடுத்துக் கலந்து காய்ச்சி, வடிகட்டித் தேய்த்துக் குளித்து வந்தால் இளநரை
மறைந்து கூந்தல் கருகருவென வளரும்.
• புழுவெட்டு சில சமயம் தலை முழுவதையும் வழுக்கையாக்கிவிடும். இதற்குக் கடுகெண்ணெயைத் தடவிக் குளித்து வந்தால் குணம் தெரியும்.
•
அரை கப் தேங்காய்ப் பாலில் ஒரு எலுமிச்சம்பழச் சாறு கலந்து அதை
மயிர்க்கால்களில் தடவி மசாஜ் செய்து பதினைந்து நிமிடங்கள் கழித்து அலசி
வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
• முட்டையின் மஞ்சள் கருவைத் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி வளர்ச்சியடையும்.
•
நீலகிரித் தைலத்தை சூடு செய்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து
வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் தலையைக் கட்டிக்கொண்டு சிறிது நேரம்
கழித்து அலசவும். இப்படிச் செய்து வந்தால் பொடுகு நீங்கிக் கூந்தல்
சுத்தமாகும்.
Post a Comment