பாதம் பளிச்சென இருக்க--மருத்துவ டிப்ஸ்!
சித்த மருத்துவர் கே.வி.அபிராமி, ''பாதம் பளிச்சென இருக்க வீட்டிலேயே எளிய சிகிச்சை செய்யலாம். வாரத்துக்கு ஒரு நாள் உப்புத் தண்ணீரில் 1...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_8129.html
சித்த மருத்துவர் கே.வி.அபிராமி, ''பாதம் பளிச்சென இருக்க வீட்டிலேயே எளிய சிகிச்சை செய்யலாம். வாரத்துக்கு ஒரு நாள் உப்புத் தண்ணீரில் 10 நிமிடங்கள் கால்களை ஊறவைக்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து பீர்க்கங்காய் நார் அல்லது க்யூபிக் ஸ்டோன் வைத்துத் தேய்க்க வேண்டும். உப்பு ஒரு கிருமிநாசினி என்பதால், பாதத்தின் உள்ளே இருக்கும் இடங்களை எல்லாம் சுத்தப்படுத்திவிடும். ஊறிய இடங்களைத் தேய்ப்பதால் இறந்த செல்கள் உதிர்ந்துவிடும். ஆலிவ் எண்ணெய் கொண்டும் 15 நாட்களுக்கு ஒரு முறை மசாஜ் பண்ணிக் கழுவலாம். கிளிஞ்சல் மெழுகு என்று எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனை வெடிப்புகளில் தடவிக்கொள்வதன் மூலம் நல்ல குணம் கிடைக்கும்!'' என்கிறார் நம்பிக்கையாக.
Post a Comment