சிக்கன சிகாமணிகளுக்கு...வடாம் வகைகள்!!!
விருந்தாளிகளுக்காக சாதம் வடித்து வைத்து, அவர்கள் வரவில்லையென்றால், வடித்த சாதத்திற்கு தக்கவாறு, பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும். ச...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_8045.html
விருந்தாளிகளுக்காக சாதம் வடித்து வைத்து, அவர்கள் வரவில்லையென்றால், வடித்த சாதத்திற்கு தக்கவாறு, பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும். சாதம் உதிரியாக இருந்தால், கிரைண்டரில் போட்டு அரைத்து, அத்துடன் மிளகாய் விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பாலிதீன் பேப்பரின் மேல் இட்டு, வெயிலில் நன்றாக காய வைக்கவும். முதல் நாள் வடித்த சாதம் என்றால், எலுமிச்சம் பழம் தேவையில்லை. அன்றே வடித்த சாதம் என்றால், எலுமிச்சை சாற்றை சிறிது சேர்த்துக் கொள்ளலாம். நன்கு காய்ந்த உருண்டை வடகத்தை, எண்ணெயில் வறுத்தெடுத்தால், மொறுமொறுவென அவல் வடகம் போன்று, சுவையாக இருக்கும். சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம்.
Post a Comment