பருப்புத் துவையலும் மைசூர் ரசமும் பருப்புத் துவையல் தேவையானவை: துவரம்பருப்பு 1/2 கப் கடலைப் பருப்பு 1/2 கப் மிளகாய் வற்றல் 4 பெருங்கா...
பருப்புத் துவையலும் மைசூர் ரசமும்
பருப்புத் துவையல்
தேவையானவை:
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப் பருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல் 4
பெருங்காயத்துண்டு சிறிதளவு
உப்பு,எண்ணைய் தேவையானது.
செய்முறை:
துவரம்பருப்பு,கடலைப் பருப்பு,மிளகாய் வற்றல்,பெருங்காயம் நான்கையும் சிறிது எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் உப்பு சேர்த்து மிக்சியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து அரைக்கவேண்டும்.
பருப்புகள் நன்றாக மசிந்து நைசாக ஆகும் வரை அரைக்கவேண்டும்.
மைசூர் ரசம்
தேவையானவை:
துவரம்பருப்பு 1/2 கப்
புளி ஒரு எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
உப்பு எண்ணைய் தேவையானது
----
அரைக்க:
தனியா 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
மிளகு 10
துவரம்பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
நெய் 1/2 டீஸ்பூன்
-----
செய்முறை:
துவரம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் குக்கரில் நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் தனியா,மிளகாய் வற்றல், மிளகு, துவரம்பருப்பு நான்கையும் எண்ணையில் லேசாக வறுத்து அரைத்து கடைசியில் சீரகத்தை பச்சையாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
-----
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து அதில் உப்பு,பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். புளித்தண்ணீர் கொதித்தவுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்.
கடைசியில் வெந்த பருப்பை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
இறக்கி வைத்த பின் நெய்யில் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.
------
பண்டிகை நாட்களுக்குப் பிறகு பருப்புத் துவையலும்,மைசூர் ரசமும் சாப்பிட்டால் வயிறு லேசாகும்.
Post a Comment