கொத்தவரை உசிலி--சமையல் குறிப்புகள்
கொத்தவரை உசிலி தேவையானவை: கொத்தவரங்காய்2 கப் (பொடியாக நறுக்கியது) துவரம்பருப்பு 1/2 கப் கடலைப்பருப்பு 1/2 கப் மிளகாய் வற்றல் 4 பெருங்காயம் ...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_09.html
கொத்தவரை உசிலி
தேவையானவை:
கொத்தவரங்காய்2 கப் (பொடியாக நறுக்கியது)
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல் 4
பெருங்காயம் 1 துண்டு
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
---
தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு சிறிதளவு
செய்முறை:
கொத்தவரங்காயைபொடியாக நறுக்கிக்கொள்ளவும். துவரம்பருப்பு,கடலைபருப்பு,மிளகாய்வற்றல்,பெருங்காயம் நான்கையும் ஒரு மணிநேரம் தண்ணீரில்
ஊறவைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 15 நிமிடம் வேகவைக்கவும்.
ஆவியில் வேகவைத்த பருப்புகளை நன்கு உதிர்க்கவும்.(மிக்சியில் ஒரு சுற்று சுற்றினால் உதிரியாக வரும்) வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து கொத்தவரை ,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். கொத்தவரைவதங்கினவுடன் உதிர்த்த பருப்புகளை சேர்த்து சிறிது எண்ணைய் விட்டு நன்றாக கிளறவும்.உதிரி உதிரியாக வரும்.
Post a Comment