மிகவும் உபயோகமான சில சமையல் குறிப்புகள்-- வீட்டுக்குறிப்புக்கள்,
* புதிதாய் அரைத்த தோசை மாவில் உடனே தோசை ஊற்றினால் தோசை சுவையாக இருக்காது. அந்த மாவில் புளித்த தயிர் ஊற்றி 10 நிமிடங்கள் கழித்து ஊற்றினால் த...

https://pettagum.blogspot.com/2012/04/blog-post_20.html
* புதிதாய் அரைத்த தோசை மாவில் உடனே தோசை ஊற்றினால் தோசை சுவையாக இருக்காது. அந்த மாவில் புளித்த தயிர் ஊற்றி 10 நிமிடங்கள் கழித்து ஊற்றினால் தோசை மொறு மொறுவென்று இருக்கும்.
* கட்லட் செய்யும் போது பிரட்தூள் இல்லாவிட்டால் அதற்கு பதில் ரவையை நெய்யில் வறுத்து விட்டு உபயோகிக்கலாம்.
* தயிர் சாதத்தில் கடுகுக்கு பதில் ஓமம் சேர்த்து தாளித்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். இது அஜீரணத்திற்கு நல்லது.
* சேப்பங்கிழங்கு, கத்திரிக்காய் இவற்றை வதக்கும் போது கொஞ்சம் கடலை மாவைத் தூவி வதக்குங்கள். கொழகொழவென்று சேராமல் சிவந்து முறுமுறுவென்று ஆகும். எண்ணெயும் அதிகம் வேண்டாம்.
* பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு எண்ணெயையோ அல்லது இரண்டு பல் பூண்டையோ போட்டால் பருப்பு வெகுவிரைவில் வெந்து விடும்.
* பச்சை பட்டாணியை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் சேருங்கள். ஓன்று போல் பட்டாணி வேகும். அதன் நிறமும் மங்காது.
* பாலை உறைக்கு ஊற்றும் போது அதில் கொஞ்சம் அரிசிக்கஞ்சியை கலந்தால் பெயர்த்து எடுக்கும்படி கெட்டித் தயிராக மாறிவிடும். ( இப்போ எங்கேங்க அரிசிக்கஞ்சி?????? எல்லாமே ரைஸ் குக்கர் மயம் தானே?????? )
* குழம்பு தண்ணியாக இருந்தால் அதில் ஒரு டீஸ்பூன் சோளமாவை, கால் டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாகி விடும்.
* கட்லட் செய்யும் போது பிரட்தூள் இல்லாவிட்டால் அதற்கு பதில் ரவையை நெய்யில் வறுத்து விட்டு உபயோகிக்கலாம்.
* தயிர் சாதத்தில் கடுகுக்கு பதில் ஓமம் சேர்த்து தாளித்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். இது அஜீரணத்திற்கு நல்லது.
* சேப்பங்கிழங்கு, கத்திரிக்காய் இவற்றை வதக்கும் போது கொஞ்சம் கடலை மாவைத் தூவி வதக்குங்கள். கொழகொழவென்று சேராமல் சிவந்து முறுமுறுவென்று ஆகும். எண்ணெயும் அதிகம் வேண்டாம்.
* பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு எண்ணெயையோ அல்லது இரண்டு பல் பூண்டையோ போட்டால் பருப்பு வெகுவிரைவில் வெந்து விடும்.
* பச்சை பட்டாணியை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் சேருங்கள். ஓன்று போல் பட்டாணி வேகும். அதன் நிறமும் மங்காது.
* பாலை உறைக்கு ஊற்றும் போது அதில் கொஞ்சம் அரிசிக்கஞ்சியை கலந்தால் பெயர்த்து எடுக்கும்படி கெட்டித் தயிராக மாறிவிடும். ( இப்போ எங்கேங்க அரிசிக்கஞ்சி?????? எல்லாமே ரைஸ் குக்கர் மயம் தானே?????? )
* குழம்பு தண்ணியாக இருந்தால் அதில் ஒரு டீஸ்பூன் சோளமாவை, கால் டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாகி விடும்.
Post a Comment