சௌசௌத் தோல் துவையல்--துவையல்கள்
சௌசௌத் தோல் துவையல் நாம் சாதரணமாக சௌசௌ (பெங்களூர் கத்திரிக்காய்) தோலை தூக்கிப் போடுவோம்,அப்படி செய்யாமல் துவையல் செய்து சாப்பிட்டால் நன்றாகய...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_1666.html
சௌசௌத் தோல் துவையல்
நாம் சாதரணமாக சௌசௌ (பெங்களூர் கத்திரிக்காய்) தோலை தூக்கிப் போடுவோம்,அப்படி செய்யாமல் துவையல் செய்து சாப்பிட்டால் நன்றாகயிருக்கும்.
தே.பொருட்கள்:
சௌசௌத் தோல் - ஒரு காயின் தோல்பகுதி மட்டும்.
உளுத்தம்பருப்பு - 1டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 3/4 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
கறிவேப்பிலை - சிறிது
வடகம் -1 டேபிள்ஸ்பூன்
புளி - 1 கொட்டைப்பாக்குளவு
தாளிக்க:
கடுகு+உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
செய்முறை :
*வெறும் கடாயில் உளுத்தம்பருப்பு+கடலைப்பருப்பு வருத்துக்கொள்ளவும்.
*சிறிது எண்ணெய் விட்டு வடகத்தை பொரித்து தனியாக வைக்கவும்.
*மீதிருக்கும் எண்ணெயில் சௌசௌத் தோல்+தேங்காய்த்துருவல்+கறிவேப்பில்லை+காய்ந்த மிளகாயை வதக்கவும்.
*ஆறியதும் அனைத்தையும் உப்பு+புளி சேர்த்து கொஞ்ச கொஞ்சமாக நீர் சேர்த்து மைய கெட்டியாக அரைக்கவும்.
*தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து நன்கு வதக்கி ஆறவைத்து பயன்படுத்தவும்.
Post a Comment