அன்பே பிரதானம்...பெட்டகம் சிந்தனை
*அன்பே பிரதானம்; அதுவே வெகுமானம். *அடக்கமே பெண்ணுக்கு அழகு. *அழுத பிள்ளைதான் பால் குடிக்கும். *அன்பான சினேகிதனை ஆபத்தில் அறியலாம். *அழை...

https://pettagum.blogspot.com/2011/09/blog-post_2806.html
*அன்பே பிரதானம்; அதுவே வெகுமானம்.
*அடக்கமே பெண்ணுக்கு அழகு.
*அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
*அன்பான சினேகிதனை ஆபத்தில் அறியலாம்.
*அழையாத வீட்டுக்கு விருந்தாளி போகாதே.
*அரக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது.
*ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்வை.
*ஆபத்தும் சம்பத்தும் யாருக்கும் உண்டு.
* ஒரு செய்தியை நீ விளம்பரம் செய்ய வேண்டுமா? அதை மிக இரகசியமாக ஒரு பெண்ணிடம் கூறு.
* கவலைக்கு மருந்து அதனைக் காலின் கீழ் போடுவதுதான்.
*தூக்கி எறியும் குதிரையைவிட சுமந்து செல்லும் கழுதை மேலானது.
*நண்பன் இல்லாதபோது உன் கைத்தடியுடன் கலந்து ஆலோசனை செய்.
* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.
* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.
*கணவன் தலைவன், மனைவி அவன் தலையிலிருக்கும் மகுடம்.
* ஆயிரம் எதிரிகளைவிட ஒரு போலி நண்பனால்தான் அதிகத் தீமை.
* ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழமொழிகளே அதிக அறிவைத் தரும்.
* நாக்கில் எலும்புகள் கிடையாது. ஆனால், அது எலும்புகளை நொறுக்க வல்லது.
* திருப்தியான பறவையும் பசி மிகுந்த பறவையும் ஒன்றாகச் சேர்ந்து பார்க்க முடியாது.
* நிலம் சூடாக இருக்கும்போது புழு மண்ணிலேயே இருந்து விடுகிறது.
* மிக மிக வேகமாக ஓடு. நீ இருமுறை ஓடுவாய்.
*மனிதனுக்கு மேலே இருக்கும் சிற்றரசன் அவனது மன சாட்சி.
* தாய்க்காக மனைவியை வெறுப்பவன் பழைய மிருகம். மனைவிக்காக தாயை வெறுப்பவன் புதிய மிருகம்.
*குழந்தைக்கு முதற்பாடம் பணிவு.
*அதிகமாக யாரும் எதையும் கொடுத்தால் ஏற்காதே!
* நல்ல உரையாடல் நல்ல படுக்கையைவிட மேலானது.
* ஒரு பெண் மற்றொரு பெண்ணை ஒருபோதும் புகழ்ந்து பேசமாட்டாள்.
* பெண் குழந்தைகள் வீட்டுக்கு அலங்காரம் அவர்கள் விற்பனைக்கு உரிய பொருள்கள்.
* பெண் குழந்தைகள் உன் முழங்கால் அளவிற்கு வளர்ந்து விட்டால் அவர்களின் சீதனப் பெட்டிகள் மார்பு அளவு இருக்க வேண்டும்.
* தந்தையின் பாசம் சவக்குழி வரை; தாயின் பாசம் சிரஞ்சீவியானது.
*உடல் சிறைபட்டுக் கிடந்தாலும் குறைந்த பட்சம் மனம் சுதந்திரமாக இருக்கிறது.
*மனிதனுக்குச் சிறந்த நன்மையும் பெரிய நோயும் பெண்ணால் கிடைக்கின்றன.
*முள்ளின் மேலிருந்து பாடினாலும் மலர் மீதிருந்து பாடினாலும் குயில் இன்மையாகவே பாடுகிறது.
* நீ ஒரு நாட்டில் நுழையும்போது அங்கு விலக்கப்பட்டவைகள் என்னவென்று விசாரித்துக்கொள்.
Post a Comment