அரிசி பருப்பு சாதம்.....சமையல் குறிப்பு
அரிசி பருப்பு சாதம் அரிசி பருப்பு சாதம் செய்யத் தேவையான பொருள்கள் : காராமணி பருப்பு - 1 கப் (வேகவைத்தது), பச்சைப் பயறு - 1 கப் (வேகவைத்தது...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_7897.html
அரிசி பருப்பு சாதம்
அரிசி பருப்பு சாதம் செய்யத் தேவையான பொருள்கள் :
காராமணி பருப்பு - 1 கப் (வேகவைத்தது),
பச்சைப் பயறு - 1 கப் (வேகவைத்தது),
துவரம் பருப்பு - 1 கப் (வேகவைத்தது),
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
நெய் - 2 கப்,
தக்காளி - 1/4 கிலோ
(நான்காக வெட்டியது),
வெங்காயம் - 1/4 கிலோ
(சிறிதாக வெட்டியது),
மிளகாய் - 6 ,
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - தேவையான அளவு.
துருவிய தேங்காய் - 1 கப்,
சீரகசம்பா அல்லது பொன்னி
அரிசி - 2 கப்,
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்.
செய்முறை :
1. குக்கர் அல்லது அடிகனமான பாத்திரத்தைச் சூடாக்கவும்.
2. நெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
3. வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
4. அதில் மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வதக்கவும்.
5. நன்றாக வதங்கியதும், கறிவேப்பிலை, வெந்த பருப்பு வகைகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டுக் கலக்கவும்.
6. ஒரு கொதி வந்ததும், ஊறவைத்துள்ள அரிசி மற்றும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து 2 விசில் வரும்படி சமைக்கவும்.
7. பரிமாறும் போது சிறிது நெய் விட்டுக் கிளறிப் பரிமாறலாம்.
Post a Comment