சமையல் குறிப்புகள்! ஆசையைத் தூண்டும் `ஆடிப்பால்'
ஆசையைத் தூண்டும் `ஆடிப்பால்' தேவையான பொருட்கள் தேங்காய் - 1 பொடியாக அரிந்த வெல்லம் - 1/2 கப் ஏலக்காய்ப் பொடி - 1/2 டீ ஸ்பூன் செய்முற...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_839.html
ஆசையைத் தூண்டும் `ஆடிப்பால்'
தேவையான பொருட்கள்
தேங்காய் - 1
பொடியாக அரிந்த வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய்ப் பொடி - 1/2 டீ ஸ்பூன்
செய்முறை
* தேங்காயைத் துருவி, சிறிது நீருடன் மிக்சியில் ஓடவிட்டு, உலோக வடிகட்டியில் போட்டு கரண்டியால் நன்கு கசக்கி தேங்காய்ப் பால் எடுக்கவும்.
* உலோக வடிகட்டியில் உள்ள சக்கையுடன் மீண்டும் சிறிது நீர் விட்டு அரைத்து மீண்டும் மேற்கண்ட முறையில் பால் எடுக்கவும். மீண்டும் சிறிது நீர் சேர்த்து சுற்றி மூன்றாம் முறை பால் எடுக்கவும்.
* பொடியாக அரிந்த வெல்லம், மூன்றாம் முறை எடுத்த தேங்காய்ப் பால் சேர்த்து அடிகனமான வாணலியில் கொதிக்கவிட்டு வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும்.
* அதை சிறிது கொதிக்க விட்டு, இரண்டாம் முறை பிழிந்த பாலைச் சேர்த்து கொதிக்க விடவும்.
* பிறகு முதல் தேங்காய்ப் பாலை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் ஏலக்காய்ப் பொடி சேர்த்து கலந்து இறக்கி வைத்து பரிமாறவும்.
குறிப்பு
* தேங்காய் நன்கு முற்றியதாக இருந்தால் ஆடிப்பாலின் சுவை மிகவும் தூக்கலாக இருக்கும்.
* தேங்காயைப் பூத்துருவலாக வெள்ளை வெளேர் என்று துருவி உடனே பால் எடுத்தால் நல்ல சுவை மிக்க பால் கிடைக்கும்.
இயற்கை நமக்கு அளித்திருக்கும் பொருட்களான தேங்காய், வெல்லம், ஏலக்காய் முதலியவற்றைக் கொண்டு ஆடிப்பால் செய்வார்கள். சற்றே இனிப்பான சுவையை தன்னிடத்தே அடக்கி உள்ள தேங்காயின் பாலெடுத்து, அதனுடன் இயற்கை இனிப்பான வெல்லம், ஏலக்காய்ப் பொடி சேர்த்து செய்யப்படும் ஆடிப்பால் தனிச்சுவை கொண்டது.
இரும்புச்சத்து நிறைந்த வெல்லம் நம் ரத்தத்தை சுத்திகரிக்க வல்லது. மேலும் சற்று விஷ முறிவுத் தன்மையும் வாய்ந்தது. அற்புத மணமிக்க ஏலக்காய்த் தூள் இதனுடன் சேர்க்கப்படுவதால் ஆடிப்பால் மணமும், சுவையும் ஒருங்கே கொண்டது.
********************************************************
Post a Comment