அமுத மொழிகள்! வெற்றிக்கு ஏழு `மந்திரங்கள்'
வெற்றிக்கு ஏழு `மந்திரங்கள்' 1. நாம் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்காக கடவுள் ஒவ்வொரு நாளையும் நமக்காக அளிக்கிறார். அதனால் ஒவ்வொரு நாளையும் இ...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_1973.html
வெற்றிக்கு ஏழு `மந்திரங்கள்'
1. நாம் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்காக கடவுள் ஒவ்வொரு நாளையும் நமக்காக அளிக்கிறார். அதனால் ஒவ்வொரு நாளையும் இன்முகத்தோடு வரவேற்று, ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
2. மகிழ்ச்சி உள்ள மனதில்தான் அமைதி குடிகொண்டிருக்கும். அமைதியான மனநிலை இருந்தால்தான் நிதானமாக சிந்தித்து, முடிவெடுத்து, வேகமாக செயல்பட்டு வெற்றிகளை குவிக்க முடியும்.
3. நாம் புதிய விஷயங்களை கற்று, செயல்படுத்த தயாராக இருக்கவேண்டும். புதிய விஷயங்களை கற்க வேண்டும் என்றால், எத்தனை வயதானாலும் வாழ்க்கைப் பள்ளியில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களைப் போல் நம்மை கருதிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும், நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களிடம் இருந்தும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.
4. வாழ்க்கையில் தோல்வியும் உண்டு. தோல்வியில் துவண்டுபோகாமல், தோல்வி தரும் பாடங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அதில் இருந்து விரைவாக மீண்டுவிட வேண்டும்.
5. வெற்றி என்பது மயக்கம் நிறைந்தது. நாம் பெற்றிருக்கும் வெற்றியைவிட அது தரும் மயக்கம் அதிகமாகிவிடக்கூடாது. தோல்வியில் இருந்து எவ்வளவு விரைவாக மீண்டு விடுகிறோமோ அதுபோல் வெற்றியில் இருந்தும் விரைவாக விடுபட்டு, அதில் மயங்கிவிடாமல் அடுத்த பயணத்தை தொடங்கவேண்டும்.
6. பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சினைகளே இல்லாமல் வாழ விரும்பினால் நமது தைரியமும், சாதுர்யமும் வெளி உலகுக்கு தெரியாமல் போய்விடும். அதனால் பிரச்சினைகளே இல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்கு பதில், `பிரச்சினைகள் எப்போது வேண்டுமானாலும் வரட்டும். நான் அதனை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் இருக்கிறேன்` என்று தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
7. நமது ஒவ்வொரு வெற்றியும் பலபேரின் ஒருங்கிணைப்பால் கிடைக்கக்கூடியது. அதனால் ஒவ்வொரு வெற்றியிலும் இந்த சமூகத்தின் பங்களிப்பு இருப்பதை உணர்ந்து, சமூகத்திற்கும் நமது பங்களிப்பை எப்போதும் செய்து கொண்டிருக்க வேண்டும்.
***
Post a Comment