சமையல் குறிப்புகள்! சுறா புட்டு
சுறாப்புட்டு, அசைவப் புட்டு வகையாகும். மாவுடன் சர்க்கரை சேர்த்து ஆவியில் வேக வைத்து சாப்பிடும் புட்டு ருசியில் சிறந்தது. எல்லோருக்கும் உகந்த...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_29.html
சுறாப்புட்டு, அசைவப் புட்டு வகையாகும். மாவுடன் சர்க்கரை சேர்த்து ஆவியில் வேக வைத்து சாப்பிடும் புட்டு ருசியில் சிறந்தது. எல்லோருக்கும் உகந்தது. அது போலவே சுறாப்புட்டும் சுவையில் சிறந்தது. சத்து மிகுந்தது.
சுறா புட்டு
தேவையான பொருட்கள்
சுறா மீன் - 1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
செய்முறை
* ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து சுறாவை வேக விடவும்.
* சுறா வெந்த பிறகு தோல், முள் நீக்கி விடவும், சதைப் பகுதியை மட்டும் உதிரி உதிரியாகச் செய்து கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், கறி வேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
* வெங்காயத்தை சேர்த்து முக்கால் பாகம் வதக்கவும். பின் பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* பின்பு சுறாவை சேர்த்துக் கிளறவும். உப்பை சரி பார்க்கவும்.
* ரொட்டித் துண்டு மாதிரி சுறா வெந்து உதிரி உதிரியாக வந்ததும் இறக்கி விடவும்.
* இது பார்ப்பதற்கு முட்டைப் பொரியல் மாதிரி இருக்கும். சுவை சூப்பராக இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------
Post a Comment