இயற்கை தரும் இளமை வரம்! ரோஜா தைலம்!
இயற்கை தரும் இளமை வரம்! ராஜகளை தரும் ரோஜா தைலம்! ரோஜாப் பூவில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருக்கும். இதிலிருந்து எடுக்கப்-படும் தைலம் சருமத்த...
https://pettagum.blogspot.com/2011/01/blog-post_4777.html
இயற்கை தரும் இளமை வரம்!
ராஜகளை தரும் ரோஜா தைலம்!
ரோஜாப் பூவில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருக்கும். இதிலிருந்து எடுக்கப்-படும் தைலம் சருமத்துக்கு மிருதுத் தன்மை-யையும் பளபளப்பையும் கொடுப்ப-துடன் நல்ல நிறத்தையும் தருகிறது. இந்த ரோஜாத் தைலத்தை வீட்டிலேயே தயாரிக்கும் முறையைப் பார்க்கலாம்.
ரோஜாப் பூக்களை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதின் அளவில் சம பங்கு தேங்காய் எண்ணெயைக் கலந்து, மிதமான தீயில் அடுப்பில் வைத்துக் காய்ச்சுங்கள். தண்ணீர் வற்றி சத்தம் அடங்கியதும் நல்ல வாசனையுடன் தைலம் தனியாகப் பிரியும். இப்போது இறக்கி, ஆற வையுங்கள். இதுதான் ரோஜா தைலம். இதை சென்ட் பாட்டிலில் அடைத்து வைத்துத் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
இந்த ரோஜா தைலத்தால் என்னவெல்லாம் உபயோகம்? பார்ப்போமா?
இரண்டு துளி ரோஜா தைலத்துடன் ஒரு துளி தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால், வறண்டு போன உதடுகள் பளபளக்கும். கருத்த உதடுகள் நிறத்துடன் ஜொலிக்கும்.
கண்களுக்குப் பாதுகாப்பைத் தருகிறது ரோஜாத் தைலம். 2 துளி ரோஜாத் தைலத்-துடன், 2 துளி தேன், அரை டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடரை கலந்து கண்களைச் சுற்றிலும் பூசி, கழுவுங்கள். கருவளையம், வறட்சி நீங்கி கண்கள் பிரகாசிக்கும்.
5 துளி ரோஜா தைலத்துடன் கடுகு எண்ணெய் 5 துளி, கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, பாதங்களில் பூசி தேய்த்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் வெடிப்புகள் மறைந்து பாதம் பஞ்சு போல் மிருதுவாகி விடும்.
முழங்கை, முழங்கால், கணுக்கால், மூட்டு பகுதிகளில் தோன்றும் கருமையை மறைய வைக்கும் சக்தியும் இந்தத் தைலத்துக்கு உண்டு. 5 துளி தேனுடன், 3 துளி ரோஜா தைலம், கால் டீஸ்பூன் வெண்ணெயை குழைத்துத் தடவுங்கள். தினமும் இப்படி செய்து வந்தால் கருமை மறைந்து மிருதுவாகும் அந்தப் பகுதிகள்.
பருக்களால் முகத்தில் தழும்பு ஏற்பட்டிருக்கிறதா? தழும்பின் மீது தினமும் ஒரு சில துளிகள் ரோஜா தைலத்தைத் தடவி வந்தால், முகம் மெழுகு போல் மின்னும்.
6 முதல் 8 துளி ரோஜா தைலத்துடன், சிவப்பு சந்தனத் தூள் அரை டீஸ்பூன் கலந்து முகத்தில் 'பேக்' ஆகப் போட்டு, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். 6 மணி நேரம் ஆனாலும் அன்று மலர்ந்த தாமரைபோல் முகம் ஃப்ரெஷ் ஆகவே இருக்கும்.
உடலைக் குளிர்ச்சியாக்கி, வறண்ட கூந்தலை மிருதுவாக்கு-வதிலும் ரோஜாவுக்கு நிகர் வேறில்லை. 10 கிராம் ரோஜா மொட்டு-டன், 10 கிராம் செம்பருத்திப் பூ, 4 செம்பருத்தி இலையை சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, வாரம் இருமுறை இதைத் தலைக்குத் தேய்த்து அலசுங்கள். ரோஜாவில் எண்ணெய்ப் பசை இருப்ப-தால் பளபளப்பைக் கொடுக்கும். செம்பருத்தி, கூந்தலை சுத்தப்படுத்தி, மிருதுவாக்கும்.
கருகரு கூந்தலுக்குக் கை கொடுக்கிறது ரோஜா. ஒரு கப் சிவப்பு ரோஜாப் பூ இதழுடன், ஒரு கப் செம்பருத்தி இதழ், தோல் நீக்கிய புங்கங்காய் 3.. இவற்றை எடுத்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி, சக்கையை எடுத்து விடுங்கள். இந்தத் தண்ணீரில் சீயக்காய் (அ) பயத்த மாவைக் கலந்து தலைக்குக் குளித்து வர, கூந்தல் மிருதுவாகும். கருகருவென்று அடர்த்தியாகவும் வளரும்.
சீராகுமே சுவாசம்!
வெற்றிலை, பாக்கு போடும்போது ரோஜா இதழ்களை சிறிது சேர்த்துக் கொண்-டால்.. அஜீரணக் கோளாறு நீங்கும்.
காதில் திருகு வலி ஏற்பட்டால், 2 சொட்டு ரோஜா தைலத்தைக் காதுக்குள் விட்டால் வலி, குத்தல் மறைந்து விடும்.
ஒரு கப் ரோஜா இதழுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டாகச் சாப்பிட்டால், உடல் உஷ்ணம் நீங்கி, குளிர்ச்சியாகும்.
ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இதனுடன் பால், வெல்லம் சேர்த்துக் குடித்தால்.. வாய்ப்புண், வாய் துர்நாற்றம் ஓடிப் போய், வாய் மணக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் தினமும் 5, 6 ரோஜா இதழ்களை சாப்பிட்டு வந்தால்.. சிறுநீர் நன்றாகப் போகும்.
சளித் தொல்லையால் அவதிப்-படுபவர்கள்.. ரோஜாவை முகர்ந்தாலே போதும். சளி, மூக்கடைப்பு நீங்கி, நன்றாக சுவாசிக்க முடியும்.
ஜோரா முகம் ஜொலிக்க ரோஜா
'ரோஜா மலரே ராஜகுமாரி.. ஆசைக் கிளியே அழகிய ராணி..'

Post a Comment