அமுத மொழிகள் ! மெளனம் சாதிப்போம்!

'மனிதன் எதைக் கூறிய போதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமல் இல்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வா...

'மனிதன் எதைக் கூறிய போதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமல் இல்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது)' அல்குர் ஆன்: 50:18. 'நம் வாயிலிருந்து சிந்தும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதிவு செய்யப்படுகின்றது. அதோடு அதற்கான பலன்களும் உடனுக்குடன் பகிர்ந்தளிக்கப்படுகின்றது' என்ற செய்தியையும் இதன் மூலம் அறிய முடிகிறது. நாம் வார்த்தை பிரயோகத்தை எந்த அளவுக்கு சிந்தித்துப் பயன்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையும் இதில் தொக்கி நிற்கின்றது. சின்ன விஷயங்களுக்காக சாதாரணமாய் நமது வீடுகளில், மனைவியையோ, குழந்தையையோ கண்டிக்க வேண்டும் என்ற நோக்கில் நம் வாயிலிருந்து புறப்படுகின்ற வார்த்தைகள் எந்த அளவுக்கு அவர்கள் மனதில் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை நாம் உணருவதில்லை. அல்லாஹ் அதனை ஏற்றுக் கொண்டானேயானால் அது எந்த அளவுக்கு அவர்களைப் பாதிக்கும் என்ற எண்ணமும் நமக்கு ஏற்படுவதில்லை. இருந்தும் எந்தக் குறிக்கோளும் இன்றி சர்வ சாதாரணமாய் அதனை பிரயோகித்து வருகிறோம். அண்ணல் நபியவர்கள் சொன்னார்கள். 'நமது உடலில் நரம்பில்லாத உறுப்பு ஒன்றிருக்கிறது. அதனை முறையாக நாம் பயன்படுத்தவில்லை என்றால் அது விளைவிக்கும் விபரீதங்கள் விலைமதிப்பற்ற உறவுகளையே உடைத்தெறிந்து விடும்' என்று. கறந்த பால் மடி புகாது. அது போன்று சிந்திய வார்த்தைகளை அள்ள முடியாது என்பது முதியோர்கள் நமக்குக் கற்றுத் தந்த கருத்து பெட்டகம். குடும்பப் பிரச்சினைகளில் அல்லது ஊர் பஞ்சாயத்துக்களில் சிந்திக்காமல் பிரயோகிக்கப்படும் வார்த்தைகளின் வீரியங்கள் எந்த அளவுக்கு வன்மங்களை வளர்த்து விட்டிருக்கின்றன என்பது ஆங்காங்கே கண்கூடு. நாளடைவில் நாம் சாதாரணமாய் பயன்படுத்தி வந்த வார்த்தைகளுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பொறுத்து அர்த்தம் கொள்ளக்கூடிய அபாயமும் உண்டு. அது போன்ற சமயங்களில் நாம் மிகவும் எச்சரிக்கையாய் செயல்பட வேண்டியது அவசியம். தர்க்கங்களில் ஈடுபடும்போது தவறி விழுகின்ற வார்த்தைகள் பல சமயங்களில் தவறான அர்த்தம் கொள்ளப்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. அதுபோன்ற நிலைகளில் தன் பக்கம் நியாயம் இருந்தாலும்கூட எடுத்துச் சொல்லாமல் மௌனம் சாதிப்பது நல்ல பலனைத் தரும். 'அனாவசிய பேச்சைத் தவிர்த்து மௌனம் சாதிப்பது சாலச் சிறந்தது' என்ற அண்ணலாரின் அமுதவாக்கும் நமக்கு அறிவுரை பகரும். வார்த்தை வீரியங்கள் இன்றைய இளைஞர்களின் கனவுகளைத் தகர்த்து பலரின் விவாகரத்திற்கு அடிப்படை அமைத்துக் கொடுத்திருக்கிறது. அண்ணன், தம்பிகளிடையே பங்காளிகளின் பகையை வளர்த்து விட்டிருக்கிறது. தாய், தந்தை, பாட்டன்களின் பாசத்தை உடைத் தெறிந்திருக்கிறது. உறவுப் பாலங்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. உலக நாடுகளிடையே தோற்றுப் போகும் பேச்சு வார்த்தைகள் உலகப் போர்களாய் உலகை ஸ்தம்பிக்கச் செய்திருக்கின்றன. தன்னலமற்ற தலைவர்கள் மட்டுமல்ல... அப்பாவி மக்களையும் காவு கொடுத்திருக்கின்றன. எனவே வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் கவனம் கொள்வோம். அதில் வரும் சிக்கலைத் தீர்ப்பதற்கு அல்லாஹ்வை திக்ரு செய்வோம். மற்றைய நேரங்களில் மௌனம் சாதிப்போம். உலகம் அமைதி பெறும்.

Related

அமுத மொழிகள் 1758688723406220378

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item