கைமணம்! அட்டகாசமான சுவையில் பலாஷாய்
தேவையானவை: கடலைமாவு - ஒரு கப், பாதாம்பருப்பு - கால் கப், சர்க்கரை - ஒரு கப், பால் - 2 கப், நெய் அல்லது எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, ஏலக...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_6703.html
தேவையானவை: கடலைமாவு - ஒரு கப், பாதாம்பருப்பு - கால் கப், சர்க்கரை - ஒரு கப், பால் - 2 கப், நெய் அல்லது எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, ஏலக்காய் - கால் டீஸ்பூன்.
செய்முறை: கடலைமாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். பாதாம்பருப்பை அரை மணி நேரம் ஊற¬வைத்து தோலை நீக்கி, பிறகு அரைத்-துக் கொள்ளவும். சலித்த கடலை-மாவுடன் அரைத்த பாதாம் விழுதை சேர்க்கவும். சர்க்கரையை கம்பிப்பதத்தில் பாகாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
பாலை சுண்டக் காய்ச்சி, அதனு-டன் கடலைமாவு+பாதாம் விழுது கலவையை கலந்து, ஏலப் பொடியையும் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் நெய் (அ) எண்ணெயை காயவைத்து, உருண்டைகளைப் பொரித்து எடுத்து ஜீராவில் சிறிது நேரம் ஊறப்போட்டு எடுத்து சாப்பிடலாம்.
பலாஷாய்: பாதாமுடன் சிறிது முந்திரி சேர்த்து அரைத்து, சிட்டிகை குங்குமப்பூ சேர்த்தால் வாசனை அபாரமாக இருக்கும். முதலில் சிறிது நெய்யும் பேக்கிங் பவுடரும் சேர்த்து தேய்த்துவிட்டு, பிறகு கடலைமாவு சேர்த்துப் பிசைந்தால் ஜாமூன் மிருதுவாக இருக்கும்.
Post a Comment