உணவே மருந்து! மாதுலம்பழ மணப்பாகு!
மாதுலம்பழ மணப்பாகு! கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் வாந்தி, மசக்கைக்கு நல்ல தீர்வாகவும், மருந்தாகவும் விளங்கும் உணவு இது...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_5141.html
மாதுலம்பழ மணப்பாகு!
கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் வாந்தி, மசக்கைக்கு நல்ல தீர்வாகவும், மருந்தாகவும் விளங்கும் உணவு இது.
தேவையான பொருள்கள்:
மாதுளம் பழம் - 6, பனைவெல்லம் - 75 -100 கிராம்(ருசிக்கேற்ப), தேன் - கால் கப்,
ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன், பன்னீர் - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: மாதுளை முத்துக்களைப் பிரித்தெடுத்து சாறு எடுக்கவும். பனைவெல்லத்தைப் பொடித்து, அடுப்பில் வைத்துக் கரைத்து, கசடு நீக்கி வடிகட்டி மீண்டும் பாகு காய்ச்சவும்.
பாகு தயாரானதும், மாதுளை சாற்றை சேர்த்து கலக்கி, பிறகு ஏலப்பொடி, பன்னீர் சேர்த்துக் கொதித்ததும், இறக்கி தேன் சேர்த்துக் கலக்கவும். மணப்பாகு நன்றாக ஆறியதும், உலர்ந்த பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
தினமும் பதினைந்து மில்லி சாற்றை, டானிக் போல அருந்தி வர, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாந்தி, உடல் சோர்வு, ரத்தக்குறைவு, உடல் பலவீனத்தைப் போக்கும். தாய்க்கும், சிசுவுக்கும் ஆரோக்கியம் மேம்படும். எந்தப் பக்கவிளைவும் இல்லாத மணப்பாகு.
Post a Comment