உணவே மருந்து! மூலிகைக் கொழம்பு!
மூலிகைக் கொழம்பு! தேவையான பொருள்கள்: வல்லாரை, முடக்கத்தான், தூதுவளை, முசுமுசுக்கை, புதினா தழை, கொத்துமல்லித் தழை, வெந்தியத் தழை, கறிவேப்ப...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_6331.html
மூலிகைக் கொழம்பு!
தேவையான பொருள்கள்:
வல்லாரை, முடக்கத்தான், தூதுவளை, முசுமுசுக்கை, புதினா தழை, கொத்துமல்லித் தழை, வெந்தியத் தழை, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடியளவு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், மஞ்சள் தூள், கடுகு, - தலா 1/2 டீஸ்பூன், புளி - எலுமிச்சையளவு, நல்லெண்ணெய் - 150 மி.லி., உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மூலிகைத் தழைகளை நீர் விட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு எல்லா மூலிகைகளையும் மிக்ஸியில் போட்டுச் சிறிது சிறிதாக நீர் விட்டு அரைத்து கால் லிட்டர் சாறு வரும் வரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். மிளகு, சீர கத்தை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். புளியை நீர் விட்டு கரைத்து வடி கட்டவும்.
அகன்ற வாணலியில் நல்லெண்ணெயைக் காய்ச்சி, நூறு மி.லி எண்ணெயைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு, மீதியுள்ள எண்ணெயில் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கிளறி, பிறகு புளிக்கரைசலை இத்துடன் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இத்துடன் மஞ்சள் தூள், சீரகம், மிளகுத்தூள் போட்டுக் கிளறவும். மூலிகைச் சாறை புளிக்கரைசலுடன் சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை கிளறி, உப்பு போடவும்.
குழம்பு சுண்டி கெட்டியாக வரும் பதத்தில் இறக்கி, மீதியுள்ள எண்ணெயை ஊற்றிக் கிளறவும். நன்றாக ஆறின பிறகு ஈரம் இல்லாத ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும். ஒரு மாதம் வரை கெடாது. சுடச்சுட சாப்பாட்டில் பிசைந்து சாப்பிடலாம். மோர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.
இந்த மூலிகைக் குழம்பு கர்ப்பகாலத்திலும், கர்ப்ப காலத்துக்குப் பிறகும் சாப்பிட்டால், தாயும், சேயும் எவ்வித நோயும் இல்லாமல் இருப்பார்கள்.
மேலும் பிரசவம் முடிந்த தாய்மார்கள், இம் மூலிகை குழம்புடன், அரைத்த சுக்குத் தூள், பனைவெல்லம் சேர்த்து சுடச்சுட சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டால், பிரசவத்தில் உண்டான அசதி நீங்கி சுறுசுறுப்பாகி விடுவார்கள்.
Post a Comment