நெற்பயிரில் மிரட்டும் பூச்சிகள்... விரட்டியடிக்க எளிய வழிகள்! விவசாயக்குறிப்புக்கள்!!

நெற்பயிரில் மிரட்டும் பூச்சிகள்... விரட்டியடிக்க எளிய வழிகள்! வயல்வெளிப் பள்ளி - கேள்விகளும்... பதில்களும்! நெற்பயிரில் பூச்சி, ...

நெற்பயிரில் மிரட்டும் பூச்சிகள்... விரட்டியடிக்க எளிய வழிகள்!
வயல்வெளிப் பள்ளி - கேள்விகளும்... பதில்களும்!


நெற்பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார், பூச்சியல் வல்லுநர் நீ. செல்வம்.
''நெல் பயிருக்குப் பூச்சித் தாக்குதலைத் தாங்கி வளரும் குணம் உண்டா?''
''நெல் பயிர், தன்னுடைய வளர்ச்சிக்குத் தேவையான இலைகளைவிட, 50 சதவிகிதம் அதிகமாக உற்பத்தி செய்யும் குணம் கொண்டது. மேலும், எல்லா பயிர்களை விடவும் 200% தன்னை தற்காத்துக் கொள்ளக்கூடிய பயிர். அதனால்தான் வறட்சியிலும், தண்ணீரிலும் வளர்கிறது. சிலவகையான பூச்சித் தாக்குதல்களையும் இயல்பாகவே தாங்கி வளரும் குணம் கொண்டதுதான் நெற்பயிர்.''
''பூச்சித் தாக்குதலை தடுக்க என்னவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?''
''ஒரு ஏக்கர் நிலத்துக்கு 200 கிலோ வேப்பங்கொட்டைத் தூள் இட்டு நடவு செய்ய வேண்டும். தழைச்சத்துக்காக அதிகமான அளவுக்கு யூரியாவைப் பயன்படுத்துவதைக் குறைத்து, மண்புழு உரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
இயற்கை விவசாயிகளாக இருந்தாலும், 'பச்சை வண்ண அட்டை’யைப் பயன்படுத்தி சோதித்து, தேவையான அளவில் மட்டுமே உரங்களைக் கொடுக்க வேண்டும். சோதனையின்போது, 3-ம் எண்ணுக்கு மேல் பச்சையம் இருந்தால், எந்தவிதமான உரங்களையும் கொடுக்கத் தேவையில்லை.  
நெல் வயல் முழுவதும், 10 இடங்களில் பயிரின் உயரத்துக்கு தென்னை மட்டையின் அடிப்பகுதி மேல்நோக்கி இருக்குமாறு நட்டு வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், ஆந்தை, கோட்டான் போன்ற பறவைகள் வந்தமர்ந்து பூச்சிகளைப் பிடித்து உண்ணும், வேப்பம் பிண்ணாக்கில் 'அசாடிரக்டின்’ போன்ற அல்க்லாய்டு சத்துகள் குறைவாக இருப்பதால், வேப்பம் பிண்ணாக்கைத் தவிர்த்து, வேப்பங்கொட்டைத் தூளைப் பயன்படுத்த வேண்டும். நான்கு பக்கங்களிலும் வரப்புகளில் பொறிப்பயிராக... உளுந்து, தட்டைப் பயறு ஆகியவற்றை சாகுபடி செய்தால், நன்மை செய்யும் பூச்சிகள் ஓடோடி வரும். இவை, தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கும். வரப்புகளின் நான்கு மூலையிலும், செண்டுமல்லிப் பூவை நடவு செய்ய வேண்டும். இதன் மூலமாக பூச்சித் தாக்குதல் வெகுவாகக் குறையும்.''
''நெல் நாற்றுகளை எந்த வகையான பூச்சிகள் அதிகமாகத் தாக்குகின்றன?''
''இலைப்பேன் மற்றும் பயிர் கரையான் ஆகியவை அதிகமாகத் தாக்குகின்றன.''
''இலைப்பேனின் தாக்குதல் எவ்வாறு இருக்கும்? இவற்றை எவ்வாறு கட்டுப் படுத்த வேண்டும்?''
''இயற்கை உரங்கள் போடப்படும் நாற்றுகளில் இந்தப் பிரச்னை இருக்காது. நாற்றுகளில் வெள்ளைக் கோடுகள் தென்பட்டால், தண்ணீரில் கையை நனைத்து, நாற்றுகளில் ஒற்றி எடுத்துப் பார்த்தால், இலைப்பேன்களைக் காணலாம். 5 பேன்களுக்கு மேல் காணப்பட்டால், தடுப்பு நடவடிக்கைகளைக் கையாள வேண்டும். நாற்றங்கால் முழுவதும் தண்ணீர் கட்டி வடித்துவிட வேண்டும். அல்லது பவர் ஸ்பிரேயர் மூலம் தண்ணீரை வேகமாகத் தெளிக்கலாம்.''
''பயிர் கரையானின் தாக்குதல் எவ்வாறு இருக்கும்? அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?''
''பயிர் கரையானால் தாக்கப்பட்ட நாற்றுகள் அழுகி இருக்கும். நாற்றங்கால் தயாரிப்பு செய்யும்போதே, ஒரு சென்ட் நிலத்துக்கு 2 கிலோ என்ற கணக்கில் வேப்பங்கொட்டைத்தூள் இட்டால், பயிர் கரையான் வராது.''
''நாற்று நடவு செய்த பிறகு பயிரை என்ன விதமான பூச்சிகள் தாக்குகின்றன? அவற்றை எப்படிக் கண்டுபிடிப்பது?''
''இலைச்சுருட்டுப் புழு, குருத்துப் பூச்சி (தண்டுத் துளைப்பான்), கம்பளிப் புழு, பச்சைக்கொம்புப் புழு, புகையான், கதிர்நாவாய்ப் பூச்சி, ஆனைக்கொம்பன், கூண்டுப்புழு, மாவுப் பூச்சி ஆகியவை தாக்குகின்றன. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
இலைச்சுருட்டுப் புழு: இலைச்சுருட்டுப் புழு மற்றும் குருத்துப் பூச்சி இவை இரண்டில் முதலில் எந்தப் பூச்சி வேண்டுமானாலும் பயிரைத் தாக்கலாம். இலைச்சுருட்டுப் புழு, இலையைச் சுருட்டிக்கொண்டு பச்சையத்தைச் சுரண்டிச் சாப்பிடும். இதனால், பயிர்கள் வெயில் நேரங்களில் வெள்ளை நிறத்தில் தோன்றும். இப்புழுவைக் கட்டுப்படுத்த... தழைச்சத்து உரங்களை நிலத்தில் சரியான அளவுகளில் பயன்படுத்த வேண்டும். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன் மூலம், பயிர்களின் மிதமான பச்சை நிறம் மட்டும் இருப்பதால் புழு தாக்குதல் இருக்காது.
குருத்துப் பூச்சி: குருத்துப் பூச்சிகள் சில நேரங்களில் நாற்றுகளையும் தாக்கும். அப் போது, பயிர்கள் காய்ந்து காணப்படும். மேலும், இளம்நாற்றுகளின் இலை நுனிப்பகுதிகளில்தான் குருத்துப் பூச்சிகளின் தாய் அந்துப் பூச்சிகள் முட்டைகளை இடு கின்றன. இவற்றைத் தடுக்க, நாற்றுகளை நடவு செய்யும்போது, இலைகளின் நுனிப் பகுதியைக் கிள்ளிவிட்டு நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 20 நாட்கள் முதல் 25 நாட்களில், இப்பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனால், பயிர்களின் நடுக்குருத்துப் பகுதி மஞ்சள் நிறத்துக்கு மாறி இருக்கும். அந்தப் பகுதியைப் பிடித்து இழுத்துப் பார்த்தால், அடியில் கெட்டவாடை வரும். ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து, மஞ்சள் நிறத்தில் தாய்அந்துப் பூச்சிகள் தென்பட்டால்... உடனடியாக வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிக்க வேண்டும்.
நடவு செய்த 28-ம் நாளில் இருந்து, ஏழு நாட்கள் இடைவெளியில் மூன்று முறை, ஏக்கருக்கு இரண்டு கன சென்டிமீட்டர் என்ற கணக்கில் 'டிரைக்கோகிரம்மா ஜப்போனிகம்’ முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை இலைகளில் கட்டினால், குருத்துப் பூச்சிகள் கட்டுப்படும்.
கம்பளிப் புழு மற்றும் பச்சைக்கொம்புப் புழு: பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் இருக்கும் கம்பளிப் புழுக்கள் அதிகமான சேதாரத்தை ஏற்படுத்தாது. பறவைகள் அமர்வதற்கு இடம் கொடுத்தால், புழுக்களை அவை பார்த்துக் கொள்ளும். புழுக்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தால், பச்சை மிளகாய்-பூண்டுக்கரைசலைத் தெளித்தாலே போதுமானது.''
- படிப்போம்...

Related

விவசாயக்குறிப்புக்கள் 6663100100083631617

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item