வியக்கவைக்கும் ஹோமியோபதி ரகசியம்--ஹோமியோபதி மருத்துவம்,
நோய்க்கான காரணியே நோயைத் தீர்க்கும் மருந்து! வியக்கவைக்கும் ஹோமியோபதி ரகசியம் உலகின் மிகவும் ...

நாள்பட்ட நோய்களுக்கு ஹோமியோபதியில் நல்ல பலன் உண்டு என்பது தெரியும். ஆனால், முதல் உதவிச் சிகிச்சைக்கே ஹோமியோபதியில் நல்ல பலன் உண்டு என்கிறது டாக்டர் பி.வி.வெங்கட்ராமனின் சமீபத்திய புத்தகமான 'உங்கள் வீட்டில் ஹோமியோபதி’. வெங்கட்ராமனுடன் ஓர் உரையாடல்.
''நோய்க்கான காரணியை வைத்தே நோயைக் குணப்படுத்தும் மாயாஜாலத்தை ஹோமியோபதி எப்படி நிகழ்த்துகிறது?''
''ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டுபிடித்த டாக்டர் சாமுவேல் ஹானிமன் ஓர் அலோபதி மருத்துவர். அவர் இந்த மாற்று மருத்துவ முறையைக் கண்டறிந்த விஷயமே சுவாரஸ்யமானது. 'மலேரியாவை உண்டாக்கும் சின்கோனா பட்டைக்கு மலேரியாவைக் குணமாக்கும் ஆற்றலும் உண்டு’ என்று அவர் ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறார். இதனால், ஆச்சர்யப்பட்டு தானே அந்த சின்கோனா பட்டையைச் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறார். ஆரோக்கியமாக இருந்த அவருக்கு மலேரியாவைப் போன்ற அறிகுறிகள் உண்டாகி இருக்கின்றன. மீண்டும் அதே சின்கோனா பட்டையைச் சாப்பிட்டபோது அந்த அறிகுறிகள் குணமானது. இதன் மூலம்தான், 'எந்த ஒரு காரணி ஒரு நோயை உண்டாக்குகிறதோ அதே காரணிதான் அதைக் குணப்படுத்தும் இயல்பும்கொண்டது’ என்று கண்டுபிடித்தார். ஹோமியோபதி இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் செயல்படுகிறது.''
''டாக்டர் ஹானிமன் அதற்குப் பிறகு மேற்கொண்ட பரிசோதனைகளில் நோய்க்கான காரணிகளையே மருந்தாகக் கொடுத்துச் சோதனை செய்து பார்த்தார். மருந்தின் அளவு அதிகமாகக் கொடுக்கப்பட்டபோது, நோயின் தீவிரம் அதிகமானது. அதே மருந்தின் அளவைக் குறைத்துக் கொடுத்த போது நோயாளிகள் குணமடையத் தொடங்கினார்கள். அதன் பிறகுதான் மிகக் குறைந்த அளவு கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். நோய் எதனால் ஏற்பட்டது என்ற காரணியை நுட்பமாகக் கண்டறிந்து, அதற்கேற்ற மருந்தைக் குறைந்த அளவு கொடுக்கும்போது நோய் குணமாகிவிடும். சரியான தேர்வும் சரியான அளவும்தான் முக்கியம்.''
''அலோபதி மருத்துவத்துக்கு இணையாக ஹோமியோபதி மருத்துவத்துக்கு மக்களிடம் வரவேற்பு இல்லையே ஏன்?''
''ஹோமியோபதி மருத்துவத்துக்குப் பக்க விளைவுகள், பத்தியங்கள் ஏதேனும் இருக்கிறதா?''
''மிகவும் சிறிய அளவில் மருந்து கொடுக்கும்போது, பக்க விளைவுகள் நிச்சயமாய் வராது. நோய்பற்றி நோயாளி தெளிவாக விவரிக்காமலோ, மருத்துவர் சரியான மருந்தை அளிக்காமல்போனாலோ, பலன் கிடைக்காமல் போகலாம். ஆனால், மிகச் சிறிய அளவிலேயே மருந்து கொடுக்கப்படுவதால் பாதிப்புகள் நிச்சயம் இல்லை. அதேபோல் ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கும்போது எந்தப் பத்தியங்களையும் பின்பற்ற வேண்டியது இல்லை. மற்ற சிகிச்சை முறைகளோடு சேர்த்தும் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.''
Post a Comment