மகளிர் மருத்துவம் வெள்ளைபடுதலா...இயற்கை வைத்தியம்,
நோயின் அறிகுறிகள்: வெள்ளைப்படுதல் உள்ளவர்களுக்கு சிறுநீர்போகும் எரிச்சலும், கடுப்பும் ஏற்படும். உடல் மெலிந்து போகும். கை, கால்கள், உடல் கணு...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_722.html
நோயின் அறிகுறிகள்:
வெள்ளைப்படுதல் உள்ளவர்களுக்கு சிறுநீர்போகும் எரிச்சலும், கடுப்பும் ஏற்படும். உடல் மெலிந்து போகும். கை, கால்கள், உடல் கணுக்கால் சதை, அனைத்து மூட்டுகளிலும் அதிக வலியை உண்டாக்கும். இந்த நோய் காரணமாக நாளுக்கு நாள் உடம்பு நலிவடைந்து விரைவிலேயே அவர்கள் களைப்படையக்கூடும். சிலருக்கு பிறப்பு உறுப்புகளில் அரிப்பும், புண்ணும் ஏற்படுவதுண்டு.
ஒரு சிலருக்கு இந்த நோயினால் உஷ்ணம் அதிகமாகி வயிற்றை பிடித்து இழுப்பது போன்ற உணர்வு இருக்கும். மலச்சிக்கல், அடிக்கடி தலைவலி, அரிப்பு ஆகியவையும் இருக்கும். ஒரு சிலருக்கு மாதவிலக்கு சரியாக வராது. இரத்த சோகையுடன் உடல் மெலிந்து வறட்சி ஏற்பட்டு நிறம் வெளுத்து மூட்டுவலி, இடுப்பு வலி, வேலை செய்யும்போது இதயம் படபடப்பு, மூச்சு வாங்குதல் போன்றவை இருக்கும்.
நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டவுடன், தகுந்த மருத்துவரை அணுகி சோதனைகள் செய்து பின் மருந்து உட்கொள்ள வேண்டும்.
பாக்டீரியா மற்றும் கிருமியால் உண்டான வெள்ளைப்படுதல் என்றால் அதற்குரிய நோய் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இந்திய மருத்துவத்தில் மூலிகைகளை கொண்டு குணப்படுத்த இயலும்.
மணத்தக்காளி சூப்
சாதாரணமாக நமக்கு கிடைக்கும் மணத்தக்காளிக் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் பூண்டுப்பல் நான்கு, சின்ன வெங்காயம் 4, மிளகு 5, சீரகம் 1 ஸ்பூன் மற்றும் சிறிது கறிவேப்பிலை, கொத்துமல்லி, போட்டு சூப் செய்து தினமும் குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
அருகம்புல்
கையளவு அருகம்புல்லை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி 4 கப் நீரில் கொதிக்க வைத்து நன்கு வற்றி 1 கப் ஆனவுடன் அதனுடன் மிளகுத்தூள் தேவைக்கேற்ப மற்றும் பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் சாப்பிட வெள்ளைப்படுதல் குணமாகும்.
உணவு முறை
· அதிக காரம், புளிப்பு, உப்பு ஆகியவற்றை குறைக்க வேண்டும்.
· உணவில் வெண்ணெய், பால், மோர் போன்றவற்றை சேர்த்து கொள்ளவேண்டும்.
· தலைக்கு வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்
· உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.
வெள்ளைப்படுதல் உள்ளவர்களுக்கு சிறுநீர்போகும் எரிச்சலும், கடுப்பும் ஏற்படும். உடல் மெலிந்து போகும். கை, கால்கள், உடல் கணுக்கால் சதை, அனைத்து மூட்டுகளிலும் அதிக வலியை உண்டாக்கும். இந்த நோய் காரணமாக நாளுக்கு நாள் உடம்பு நலிவடைந்து விரைவிலேயே அவர்கள் களைப்படையக்கூடும். சிலருக்கு பிறப்பு உறுப்புகளில் அரிப்பும், புண்ணும் ஏற்படுவதுண்டு.
ஒரு சிலருக்கு இந்த நோயினால் உஷ்ணம் அதிகமாகி வயிற்றை பிடித்து இழுப்பது போன்ற உணர்வு இருக்கும். மலச்சிக்கல், அடிக்கடி தலைவலி, அரிப்பு ஆகியவையும் இருக்கும். ஒரு சிலருக்கு மாதவிலக்கு சரியாக வராது. இரத்த சோகையுடன் உடல் மெலிந்து வறட்சி ஏற்பட்டு நிறம் வெளுத்து மூட்டுவலி, இடுப்பு வலி, வேலை செய்யும்போது இதயம் படபடப்பு, மூச்சு வாங்குதல் போன்றவை இருக்கும்.
நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டவுடன், தகுந்த மருத்துவரை அணுகி சோதனைகள் செய்து பின் மருந்து உட்கொள்ள வேண்டும்.
பாக்டீரியா மற்றும் கிருமியால் உண்டான வெள்ளைப்படுதல் என்றால் அதற்குரிய நோய் எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இந்திய மருத்துவத்தில் மூலிகைகளை கொண்டு குணப்படுத்த இயலும்.
மணத்தக்காளி சூப்
சாதாரணமாக நமக்கு கிடைக்கும் மணத்தக்காளிக் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் பூண்டுப்பல் நான்கு, சின்ன வெங்காயம் 4, மிளகு 5, சீரகம் 1 ஸ்பூன் மற்றும் சிறிது கறிவேப்பிலை, கொத்துமல்லி, போட்டு சூப் செய்து தினமும் குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
அருகம்புல்
கையளவு அருகம்புல்லை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி 4 கப் நீரில் கொதிக்க வைத்து நன்கு வற்றி 1 கப் ஆனவுடன் அதனுடன் மிளகுத்தூள் தேவைக்கேற்ப மற்றும் பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் சாப்பிட வெள்ளைப்படுதல் குணமாகும்.
உணவு முறை
· அதிக காரம், புளிப்பு, உப்பு ஆகியவற்றை குறைக்க வேண்டும்.
· உணவில் வெண்ணெய், பால், மோர் போன்றவற்றை சேர்த்து கொள்ளவேண்டும்.
· தலைக்கு வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்
· உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.
Post a Comment