கோடை டிப்ஸ்!---உபயோகமான தகவல்கள்
• தர்ப்பூசணி பழம் வாங்கி சாப்பிடும்போது அதன் தோலை சீவி உப்பு கலந்த தயிரில் ஒரு நாள் ஊற வைத்து, பின்பு வெயிலில் காய வைத்து எண்ணெயில் பொறித...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_04.html
• தர்ப்பூசணி பழம் வாங்கி சாப்பிடும்போது அதன் தோலை சீவி உப்பு கலந்த தயிரில் ஒரு நாள் ஊற வைத்து, பின்பு வெயிலில் காய வைத்து எண்ணெயில் பொறித்தால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
• ஸ்குவாஷ் தயாரிக்கும்போது எசன்ஸ் சேர்க்காமல் தயாரித்து வைத்துக்கொண்டு கீழ்க்கண்ட சாமான்களை மேலே தூவி பறிமாறினால் ஃப்ரெஷ்ஷாக தயாரித்தது போன்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடலாம்.
ரோஜா இதழ்கள்,2. புதினா இதழ்கள் 3. ஃப்ரீசரில் வைத்த ஆரஞ்சுப்பழம், எலுமிச்சம்பழத் தோல்கள், வெள்ளரித் துருவல், கமலா ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி பழ முத்துகள்.
•திராட்சை ஸ்குவாஷ் தயாரிக்க சாறு பிழிவதற்கு முன் திராட்சை பழங்களை அடுப்பில் வாணலியில் போட்டுச் சிறிது புரட்டிவிட்டுத் தயாரித்தால் அதிகமாகச் சாறு கிடைப்பதோடு காறாமலும் இருக்கும்.
•எலுமிச்சம் பழ ஜூஸ் செய்யும்போது சர்க்கரை எவ்வளவு போட வேண்டும் என்பதற்கு ஒரு சுலபமான வழி என்னவென்றால் பிழிந்த எலுமிச்சம் பழச்சாறை ஒரு டம்ளரில் அளந்து அதைப்போல இரண்டு மடங்கு சர்க்கரை போட்டால் சரியாக இருக்கும்.
• கோடைக் காலத்தில் மண் பானை நீரைப் பருகினால் சிலருக்கு சளி பிடிக்கும். அதைத் தவிர்க்க பானை நீரில் சிறிதளவு துளசி இலைகளைப் போட்டு பின்பு அருந்துங்கள்.
•வெயில் அதிகமாக இருக்கும் நாள்களில் வெளியில் போகும்போது ஒரு துண்டு வெங்காயத்தைப் பையில் போட்டுக்கொண்டு போகவும். மயக்கமோ, தலைச்சுற்றலோ வந்தால் வெங்காயத்தை கசக்கி நன்றாக முகருங்கள். அதனுடைய கார நெடி தலைசுற்றலைச் சரிப்படுத்திவிடும்.
•கிர்ணிப் பழம் கோடையில் ஏற்படும் களைப்பை நீக்கி சக்தியை அளிக்கிறது. நீர் சுருக்கை குணப்படுத்தும். உடல் வெம்மையை தணித்து குளிர்ச்சியை ஊட்டும்.
•நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் பத்து டம்ளர் குளிர்ந்த நீரைப் பருகுதல் அவசியம். அதிக உடற்சூடு உடையவர்கள் அதிகாலையில் வெந்தயப் பொடியைச் சிறிதளவு வாயில்போட்டு மோர் குடிப்பது நல்லது.
• ஸ்குவாஷ் தயாரிக்கும்போது எசன்ஸ் சேர்க்காமல் தயாரித்து வைத்துக்கொண்டு கீழ்க்கண்ட சாமான்களை மேலே தூவி பறிமாறினால் ஃப்ரெஷ்ஷாக தயாரித்தது போன்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடலாம்.
ரோஜா இதழ்கள்,2. புதினா இதழ்கள் 3. ஃப்ரீசரில் வைத்த ஆரஞ்சுப்பழம், எலுமிச்சம்பழத் தோல்கள், வெள்ளரித் துருவல், கமலா ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி பழ முத்துகள்.
•திராட்சை ஸ்குவாஷ் தயாரிக்க சாறு பிழிவதற்கு முன் திராட்சை பழங்களை அடுப்பில் வாணலியில் போட்டுச் சிறிது புரட்டிவிட்டுத் தயாரித்தால் அதிகமாகச் சாறு கிடைப்பதோடு காறாமலும் இருக்கும்.
•எலுமிச்சம் பழ ஜூஸ் செய்யும்போது சர்க்கரை எவ்வளவு போட வேண்டும் என்பதற்கு ஒரு சுலபமான வழி என்னவென்றால் பிழிந்த எலுமிச்சம் பழச்சாறை ஒரு டம்ளரில் அளந்து அதைப்போல இரண்டு மடங்கு சர்க்கரை போட்டால் சரியாக இருக்கும்.
• கோடைக் காலத்தில் மண் பானை நீரைப் பருகினால் சிலருக்கு சளி பிடிக்கும். அதைத் தவிர்க்க பானை நீரில் சிறிதளவு துளசி இலைகளைப் போட்டு பின்பு அருந்துங்கள்.
•வெயில் அதிகமாக இருக்கும் நாள்களில் வெளியில் போகும்போது ஒரு துண்டு வெங்காயத்தைப் பையில் போட்டுக்கொண்டு போகவும். மயக்கமோ, தலைச்சுற்றலோ வந்தால் வெங்காயத்தை கசக்கி நன்றாக முகருங்கள். அதனுடைய கார நெடி தலைசுற்றலைச் சரிப்படுத்திவிடும்.
•கிர்ணிப் பழம் கோடையில் ஏற்படும் களைப்பை நீக்கி சக்தியை அளிக்கிறது. நீர் சுருக்கை குணப்படுத்தும். உடல் வெம்மையை தணித்து குளிர்ச்சியை ஊட்டும்.
•நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் பத்து டம்ளர் குளிர்ந்த நீரைப் பருகுதல் அவசியம். அதிக உடற்சூடு உடையவர்கள் அதிகாலையில் வெந்தயப் பொடியைச் சிறிதளவு வாயில்போட்டு மோர் குடிப்பது நல்லது.
Post a Comment