ஸ்டஃப்ட் புடலங்காய்--சமையல் குறிப்புகள்,
ஸ்டஃப்ட் புடலங்காய் தேவையானவை: புடலங்காய்-4 உருளைக்கிழங்கு-2 தேங்காய்த்துருவல்- 2 தேக்கரண்டி மைதா மாவு- 2 தேக்கரண்டி எண்ணெய்- 50 கி...
https://pettagum.blogspot.com/2012/05/blog-post_5080.html
ஸ்டஃப்ட்
புடலங்காய்
தேவையானவை:
புடலங்காய்-4
உருளைக்கிழங்கு-2
தேங்காய்த்துருவல்- 2 தேக்கரண்டி
மைதா மாவு- 2 தேக்கரண்டி
எண்ணெய்- 50 கிராம்
முந்திரிப்பருப்பு-5
பச்சை மிளகாய்-2
கொத்தமல்லி- 1 கட்டு
இஞ்சி- 1 துண்டு
மஞ்சள்பொடி- சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
செய்முறை: புடலங்காயை அரை அங்குல நீளத்தில் வட்டமான துண்டுகளாகச் செய்து விதைகளை நீக்கி சிறிதளவு உப்புக் கலந்த தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை அகற்றி, கேரட் துருவியில் துருவி வைத்துக்கொள்ள வேண்டும். முந்திரிப் பருப்பை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். இஞ்சி, பச்சைமிளகாய் ஆகிய இரண்டையும் நன்றாக வதக்கி விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு துருவல், முந்திரிப்பருப்பு அரைத்த விழுது, கொத்தமல்லி, தேங்காய்த் துருவல், மஞ்சள்பொடி, உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, புடலங்காய் துண்டுகளில் நிரப்ப வேண்டும்.
மைதாவைக் கெட்டியாகப் பிசைந்து புடலங்காய்த் துண்டுகளின் இருபக்கமும் இடைவெளி விடாமல் நிரப்ப வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு புடலங்காய்த் துண்டுகளை போட்டு பொறித்து எடுக்க வேண்டும்.
புடலங்காய்
தேவையானவை:
புடலங்காய்-4
உருளைக்கிழங்கு-2
தேங்காய்த்துருவல்- 2 தேக்கரண்டி
மைதா மாவு- 2 தேக்கரண்டி
எண்ணெய்- 50 கிராம்
முந்திரிப்பருப்பு-5
பச்சை மிளகாய்-2
கொத்தமல்லி- 1 கட்டு
இஞ்சி- 1 துண்டு
மஞ்சள்பொடி- சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
செய்முறை: புடலங்காயை அரை அங்குல நீளத்தில் வட்டமான துண்டுகளாகச் செய்து விதைகளை நீக்கி சிறிதளவு உப்புக் கலந்த தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலை அகற்றி, கேரட் துருவியில் துருவி வைத்துக்கொள்ள வேண்டும். முந்திரிப் பருப்பை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். இஞ்சி, பச்சைமிளகாய் ஆகிய இரண்டையும் நன்றாக வதக்கி விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு துருவல், முந்திரிப்பருப்பு அரைத்த விழுது, கொத்தமல்லி, தேங்காய்த் துருவல், மஞ்சள்பொடி, உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, புடலங்காய் துண்டுகளில் நிரப்ப வேண்டும்.
மைதாவைக் கெட்டியாகப் பிசைந்து புடலங்காய்த் துண்டுகளின் இருபக்கமும் இடைவெளி விடாமல் நிரப்ப வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு புடலங்காய்த் துண்டுகளை போட்டு பொறித்து எடுக்க வேண்டும்.
Post a Comment