யோகாசனத்தின் கட்டுப்பாடுகள்---ஆசனம்
*சாப்பிட்டு குறைந்தது 4 மணி நேரம் சென்ற பிறகும். காபி, டீ, குடித்தால் 1 மணி நேரம் கழிந்த பின்பும் ஆசனங்கள் செய்யலாம். • இரவில் நீண்ட நேர...

https://pettagum.blogspot.com/2012/05/blog-post_4276.html
*சாப்பிட்டு குறைந்தது 4 மணி நேரம் சென்ற பிறகும். காபி, டீ, குடித்தால் 1 மணி நேரம் கழிந்த பின்பும் ஆசனங்கள் செய்யலாம்.
• இரவில் நீண்ட நேரம் விழித்திருத்தல், நீண்ட தூரம் பயணம் செய்த நாள், எண்ணெய் தேய்த்து குளித்த நாள் மற்றும் உடல் சோர்வு, தலைவலி, இருக்கும் போதும் ஆசனங்கள் செய்யாது சாந்தி ஆசனம் மட்டும் செய்யலாம்.
• யோகப் பயிற்சி செய்பவர்கள் உருளைக் கிழங்கு மசாலா உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.
• வெறும் தரையில் யோகா பயிற்சி செய்யக் கூடாது . பாய் (அ) விரிப்பு விரித்து தான் செய்ய வேண்டும்.
• காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களாகிய சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், பல் துலக்குதல் போன்றவற்றைச் செய்த பின்பே ஆசனம் பயில வேண்டும்.
• யோகாசனம் செய்யும் முன்போ அல்லது செய்த உடனேயோ குளிப்பது ஏற்றதல்ல.
• உடல் உறவு கொள்ளும் நாட்களிலும் ஆசனம் செய்தல் கூடாது.
• வயிற்றில் வலி உடையவர்கள் யோகாசனம் செய்தல் கூடாது.
• தலைவலி இருக்கும் நாட்களில் ஆசனம் செய்ய வேண்டாம்.
• திறந்த வெளியில் அல்லது காற்றோட்டமான அறையில் ஆசனம் செய்தல் வேண்டும். காபி, டீ, புகையிலை, லாகிரி வஸ்துகள், மது அறவே கூடாது.
• யோகாசனம் செய்யும் போது வேறு உடற்பயிற்சி கூடாது.
• இதய நோயுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர் ஆலோசனையுடன் யோகாசனத்தைத் தேர்வு செய்து செய்தல் நன்று.
• யோகாசனத்தைத் தினமும் அரை மணி முதல் இரண்டு மணி வரை செய்து பழகலாம்.
• யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் இரண்டு நிமிடம் அமைதியாக பத்மாசனம் (அ) சுகாசனத்தில் அமரவும்.
• இரவில் நீண்ட நேரம் விழித்திருத்தல், நீண்ட தூரம் பயணம் செய்த நாள், எண்ணெய் தேய்த்து குளித்த நாள் மற்றும் உடல் சோர்வு, தலைவலி, இருக்கும் போதும் ஆசனங்கள் செய்யாது சாந்தி ஆசனம் மட்டும் செய்யலாம்.
• யோகப் பயிற்சி செய்பவர்கள் உருளைக் கிழங்கு மசாலா உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.
• வெறும் தரையில் யோகா பயிற்சி செய்யக் கூடாது . பாய் (அ) விரிப்பு விரித்து தான் செய்ய வேண்டும்.
• காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களாகிய சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், பல் துலக்குதல் போன்றவற்றைச் செய்த பின்பே ஆசனம் பயில வேண்டும்.
• யோகாசனம் செய்யும் முன்போ அல்லது செய்த உடனேயோ குளிப்பது ஏற்றதல்ல.
• உடல் உறவு கொள்ளும் நாட்களிலும் ஆசனம் செய்தல் கூடாது.
• வயிற்றில் வலி உடையவர்கள் யோகாசனம் செய்தல் கூடாது.
• தலைவலி இருக்கும் நாட்களில் ஆசனம் செய்ய வேண்டாம்.
• திறந்த வெளியில் அல்லது காற்றோட்டமான அறையில் ஆசனம் செய்தல் வேண்டும். காபி, டீ, புகையிலை, லாகிரி வஸ்துகள், மது அறவே கூடாது.
• யோகாசனம் செய்யும் போது வேறு உடற்பயிற்சி கூடாது.
• இதய நோயுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர் ஆலோசனையுடன் யோகாசனத்தைத் தேர்வு செய்து செய்தல் நன்று.
• யோகாசனத்தைத் தினமும் அரை மணி முதல் இரண்டு மணி வரை செய்து பழகலாம்.
• யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் இரண்டு நிமிடம் அமைதியாக பத்மாசனம் (அ) சுகாசனத்தில் அமரவும்.
2 comments
வணக்கம்,
யோகாசனங்கள் பற்றிய தங்கள் இடுகைகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.
> மாதவிடாய் காலங்களில் ஆசனங்கள் செய்யலமா?
> மசாலா பொடிகள் அல்லாமல் பூண்டு, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை சேர்த்த உணவுகளை உட்கொள்ளலாமா?
அன்பார்ந்த சகோதரி சுருதி விஜயராகவன் அவர்களுக்கு அன்புடன் A.S.முஹம்மது அலி எழுதியது. தங்களின் கருத்துக்கள் பார்;த்தேன். மாதவிடாய் காலங்;களில் யோகாசனம் செய்வது உடலுக்கு அதிமான களைப்பை ஏற்படுத்தும். ஆகையால் அதனை அக்காலங்களில் தவிர்ப்பதே நல்லது. மேலும் மாசலா பொடிககள் அல்லாமல் பூண்டு, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை சேர்த்த உணவுகளை உட்கொள்ளலாம் இப்படிக்கு A.S. முஹம்மது அலி
Post a Comment