அமுத மொழிகள்! இறைவனிடம் கையேந்துங்கள்!

இறைவனிடம் கையேந்துங்கள்! மனிதன் தன்னுடைய இயக்கங்கள் அனைத்திற்கும் காரணகர்த்தாவான அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதையும், தன்னுடைய தேவைகளை அவன...

இறைவனிடம் கையேந்துங்கள்! மனிதன் தன்னுடைய இயக்கங்கள் அனைத்திற்கும் காரணகர்த்தாவான அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதையும், தன்னுடைய தேவைகளை அவனிடமே கேட்டுப் பெறுவதையும் அல்லாஹ் விரும்புகிறான். மனிதன் கருவில் உருவாகும் முன்னரே உலக வாழ்வில் அவன் நிலைமைகள் அத்துனையும் நிர்மாணிக்கப்பட்டு விடுகின்றன. "எங்கே பிறப்பான்? எப்படி வாழ்வான்? எங்ஙனம் ஆடி அடங்குவான்?' என்பதெல்லாம் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலையில்தான் உலகில் அவனது பிரவேசம் நிகழ்கிறது. "லஹ்வுல் மக்ஃபூல்' என்ற ஏட்டில் பதியப்பட்ட இந்த விதிகள் ஒவ்வொன்றும், அந்தந்தக் காலகட்டத்தில் எவ்வித மாற்றமுமின்றி நிகழ்ந்தே தீரும். நிர்ணயிக்கப்பட்ட இந்த நியதிகளைக்கூட மாற்றியமைக்கக்கூடிய ஒன்று உண்டு என்றால் அதுதான் "துஆ.' இறைவனிடம் கையேந்திப் பிரார்த்தனை செய்தல் என்ற இந்த ஒன்றுக்கு மட்டும்தான் அந்தச் சக்தி உண்டு. நிச்சயமாக விதித்த விதியை மாற்றியமைக்கக்கூடிய வல்லமை கொண்டவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான். ""ஒவ்வொரு நாளும் தஹஜ்ஜத்துடைய அதிகாலை வேளையிலே அடிவானத்தில் வந்து நின்று கொண்டு என்னிடம் கேட்பவர்கள் யாராவது இருக்கின்றார்களா? அள்ளித் தரக் காத்திருக்கிறேன். ஆரோக்கியம் வேண்டுமா? ஐஸ்வர்யம் வேண்டுமா? என் கஜானா என்றுமே குறைந்து விடுவதில்லை'' என்று கூறிக் கொண்டு மனிதனிடம் பிரார்த்தனையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் அல்லாஹ். ""என்னை நோக்கி ஒருவன் ஓரடி வந்தால், நான் அவனை நோக்கி இரண்டு அடிகள் முன்னேறுகிறேன். என்னை நோக்கி நடந்து வந்தால் அவனை நோக்கி ஓடி வருகிறேன் என்பதோடு ஒவ்வொருவரின் கழுத்துப் பிடரி உயிர் நரம்பின் அருகில் இருந்து கொண்டு உங்களின் துஆக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். "ஆகுக' என்று ஆணையிட்டால் அதுவாக ஆகிவிடக் கூடிய அதீத சக்தியை உள்ளடக்கியவனாக உள்ளேன். என்னால் முடியாதது எதுவுமே இல்லை. எனவே என்னிடமே உள்ளத் தூய்மையோடு கேட்டுப் பாருங்கள். நிச்சயமாகப் பெற்றுக் கொள்வீர்கள்'' என்று அறைகூவலும் இடுகின்றான் இறைவன். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், உள்ளத் தூய்மையோடு செய்யப்படுகின்ற பிரார்த்தனைகளுக்குத்தான் இறைவனிடம் அங்கீகாரம் கிடைக்கும். நம்பிக்கையற்ற நிலையில் செய்யப்படுகின்ற எந்த "துஆ'வுமே வானளவில் உயர்த்தப்படுவதுமில்லை. ""எழுபது தாயின் அன்பைவிட அபரிதமான அன்பினால் மிகைத்தவனாகவும், உங்கள் கோரிக்கைகள் அத்தனையும் அங்கீகரிப்பதை என் மீது கடமையாகவும் ஆக்கிக் கொண்டுள்ளேன்'' என்று இன்னுமொரு இடத்திலே அல்லாஹ்வால் எடுத்தியம்பப்பட்டுள்ளது. இறைவனிடம் வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் நியாயமானதாகவும், ஏற்புடையதாகவும் இருத்தல் அவசியம். இல்லையேல் அதற்கான பலனில் கால தாமதம் ஆகலாம்; அல்லது மாற்றங்கள் செய்யப்பட்டு வழங்கப்படலாம். இங்கு பொறுமையைக் கையாள்வது அவனின் மீது கொண்ட நம்பிக்கையின் வெளிப்பாடாக அமையும். இவற்றை எல்லாம் மீறி "துஆ'க்கள் மறுக்கப்பட்டால் அதில் நன்மை இருக்கலாம் என்று அதனை ஏற்றுக் கொள்கின்ற மனப் பக்குவமும் வேண்டும். "பிரார்த்தனையில் ஏதாவது தவறு ஏற்பட்டுவிட்டதா?' என்று சுய பரிசோதனை செய்து, அதனை திருத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வதும் அவசியம்!

Related

அமுத மொழிகள் 7964341424271275651

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item