சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில்
திருநெல்வேலி பிள்ளைமார் வீட்டு ஸ்பெஷல் ‘‘சொதி’’யை எப்படித் தயாரிப்பது? கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்ற காய்கறிகளை சமமாக எடுத...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_3765.html
திருநெல்வேலி பிள்ளைமார் வீட்டு ஸ்பெஷல் ‘‘சொதி’’யை எப்படித் தயாரிப்பது?
கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்ற காய்கறிகளை சமமாக எடுத்து நறுக்கி வேக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மூடி தேங்காயைத் துருவி திக்காகப் பால் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தண்ணீர் சேர்த்து இரண்டாம் மூன்றாம் பால் எடுங்கள். கடாயில் சிறிது தேங்காய் எண்ணெயை ஊற்றி சோம்பு நறுக்கிய வெங்காயம் பூண்டு, இஞ்சி, எட்டு கீறிய பச்சை மிளகாயைப் போட்டு வதக்குங்கள். பின்னர் அதில் உப்பு சேர்த்து மூன்றாம் பாலைவிட்டு கொதித்ததும் இரண்டாம் பால் விட்டு, கிளறி வேக வைத்த காய்கறியைச் சேருங்கள். நன்கு கொதி வந்ததும், திக்கான மூன்றாம் பாலை ஊற்றி கொதிக்க விட்டு இறக்குங்கள். படு ருசியான ‘‘சொதி’’ தயார்.
Post a Comment