அமர்க்களமாக இருக்கும்! சென்னா ரஸமலாய்
சென்னா ரஸமலாய் தேவையானவை: பனீர் & கால் கிலோ, சர்க்கரை & முக்கால் கிலோ, பால் & ஒரு லிட்டர், குங்குமப்பூ & சிறிதளவு, ஏலக்கா...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_7548.html
சென்னா ரஸமலாய்
தேவையானவை:
பனீர் & கால் கிலோ,
சர்க்கரை & முக்கால் கிலோ,
பால் & ஒரு லிட்டர்,
குங்குமப்பூ & சிறிதளவு,
ஏலக்காய்தூள் & 2 டீஸ்பூன்.
செய்முறை: பாலை நன்றாக, குறுகும் அளவு காய்ச்சி, ஏலக்காய்தூளும், குங்குமப்பூவும் சேர்த்து ஆறவைக்கவும். சிறிதளவு சர்க்கரை சேர்க்கவும். இதுதான் ரஸமலாய்.
பனீரை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்றாக உதிர்த்து, கையால் மிருதுவாகப் பிசையவேண்டும். ‘மெத்’தென்று வந்ததும், குட்டி, குட்டி உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். ஒரு கடாயில் சர்க்கரையைப் போட்டு, அது மூழ்கும் வரை நீர் ஊற்றி, ‘தளதள‘வென கொதிக்கவிட்டு, பனீர் உருண்டைகளைப் போடவும். இது நன்றாக வெந்து மேலே மிதக்கும். இவற்றை கரண்டியால் எடுத்து, ஒரு பாத்திரத்தில் வைக்கவும். ஒரு சிறிய கிண்ணத்தில் 4, 5 உருண்டைகளைப் போட்டு, அதன் மேலே ஒரு கரண்டி ரஸமலாயை ஊற்றிப் பரிமாறவும். குளிரவைத்து சாப்பிட்டால், அமர்க்களமாக இருக்கும்!
Post a Comment