உடல் பருமனை (ஒபிஸிட்டி) குறைப்பதற்கான உணவு முறைகள் ....கிச்சன் கிளினிக்!
எந்த நோய்க்கு என்ன சாப்பாடு ? ...
https://pettagum.blogspot.com/2013/06/blog-post_6754.html
எந்த நோய்க்கு என்ன சாப்பாடு ?
"
'அதிகாலை இஞ்சி, நண்பகல் சுக்கு, இளம் சூடான தண்ணீர்... இவை முதுமையை
நெருங்க விடாது' என்று பேச்சுவாக்கில் சொல்வதுண்டு. பொதுவாக... சுக்கு,
உடம்பைக் குறைக்கக்கூடியது. இஞ்சி, கொழுப்பை சூடாக்கி இளக்கும் தன்மை
கொண்டது. அதனால்தான் அசைவ உணவில் இஞ்சி கட்டாயமாகச் சேர்க்கப்படுகிறது
என்பதை மனதில் கொள்ளுங்கள்.
விடிகாலையில் வெறும் வயிற்றில் சூடான வெந்நீரை 5 முதல் 10 டம்ளர் குடித்தால், தொப்பை குறைவதுடன், வயிற்றில் உள்ள கொழுப்பும் கரைந்துவிடும்.
ஒபிஸிட்டியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் சிலர், சதா சர்வகாலமும் எதையாவது சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், அடிக்கடி எதையாவது சாப்பிடவேண்டும் என்கிற எண்ணத்தையும் அவசியத்தையும் தகர்ப்பதுடன், சரியான நேரத்தில் பசி எடுக்கும்.
ஒபிஸிட்டி உள்ளவர்கள்
மட்டுமல்ல... மற்றவர்களும்கூட காலை சிற்றுண்டியை எக்காரணம் கொண்டும்
நிறுத்தக் கூடாது. அப்படிச் சாப்பிடாமல் இருந்துவிட்டு, 7, 8 மணி நேரம்
கழித்து லஞ்ச் சாப்பிடும்போது அதிகப்படியாக சாப்பிடுவோம். இதனால் சரியாக
ஜீரணமாகாமல் போகும். உடல் எடையும் கூடிவிடும். சரியான நேரத்தில்
சாப்பிடுவது மிகவும் அவசியம்.
காலையில் காபி, டீ இவற்றுக்குப் பதிலாக சுக்கு சூப்பை சாப்பிடுவது ஒபிஸிட்டிக்கு நல்லது. மலச்சிக்கலும் ஏற்படாது.
தேவையானவை:
சுக்கு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் -
தலா 1, பரங்கிக்காய் - ஒரு துண்டு (3 இன்ச் அளவு), மஞ்சள்தூள் - ஒரு
சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சுக்கு, மிளகு ஆகியவற்றை நன்றாக இடித்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பரங்கிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். தண்ணீர் வற்றியதும், மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.
கடந்த இதழில் பிளாக் காபி,
பிளாக் டீ சாப்பிடலாம் என்று டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி
சொல்லியிருந்தார். ஆனால், அதன் காரணமாக மலச்சிக்கல் பிரச்னை வரலாம்.
இதனால், எப்போதும் 'டல்'லாக இருப்பதுபோல உணர்வு ஏற்படும். இந்தச் சிக்கலை
போக்க பால் உணவான பனீர் சாண்ட்விச் ரெசிபியைச் சொல்கிறேன். மதியவேளையில்
இரண்டு சாண்ட்விச் சாப்பிடுங்கள். உடம்பு சுறுசுறுப்பாக இருக்கும்.
அடிக்கடி சாப்பிடவேண்டும் என்கிற எண்ணமும் தோன்றாது. மதிய தூக்கத்தையும்
துரத்திவிடும்.
தேவையானவை:
விரல்அளவு பனீர் துண்டுகள் - 5, வட்டமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி,
வெள்ளரிக்காய் - - தலா 2 துண்டுகள், கோதுமை பிரெட் - 2 ஸ்லைஸ், வெண்ணெய் -
கால் டீஸ்பூன்.
செய்முறை: ஃப்ரை பேனில் சிறிது வெண்ணெயைப் போட்டு உருக்கி, பனீர் சேர்த்து வறுத்து இறக்கவும். உடைந்தாலும் பரவா யில்லை. ஒரு பிரெட்டில் இருபுறமும் வெண்ணெயைத் தடவி, வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காயை வைத்து லேசாக வறுத்த பனீரை வைத்து மற்றொரு பிரெட் துண்டால் மூடி அப்படியே சாப்பிடவேண்டும்.
எச்சரிக்கை: இதற்கு தக்காளி சாஸ், கெச்சப் என்று எதுவும் தொட்டுச் சாப்பிடக்கூடாது.
பரிமாறுவோம்...
==========================================================================
பின்குறிப்பு: டயட்டீஷியனின் சிபாரிசுகளை ஏற்றுக் கொண்டு, அதன் படியே, சிறு மாற்றங்கள் செய்யப்பட்ட ரெசிபியைத்தான் தந்திருக்கிறார் செஃப்.
கிச்சன் கிளினிக்! |
"
'எந்த நோய்க்கு என்ன சாப்பாடு - கிச்சன் கிளினிக்' என்ற புதிய பகுதி
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எல்லா நோய்க்கும் சொல்வீர்களா?"
கடந்த இதழில்
வெளியான புதிய பகுதி குறித்து வந்து குவிந்த நூற்றுக்கணக்கான கடிதங்களில்
ஒரு சாம்பிள் கடிதம்தான் இது. அத்தனை கடிதங்களையும் படித்து முடித்த செஃப்
ஜேக்கப், "என்னுடய பொறுப்பு கூடியிருக்கிறது என்பதை உணர்கிறேன். தேடித்
தேடி எல்லாவித நோய் மற்றும் குறைபாடுகளுக்கான உணவுகளைக் கொண்டு வந்து
நிச்சயமாக வாசகிகளுக்குப் படைப்பேன்" என்றபடியே, உடல் பருமனை (ஒபிஸிட்டி)
குறைப்பதற்கான உணவு முறைகளை இந்த இதழிலும் தொடர்ந்தார்.
விடிகாலையில் வெறும் வயிற்றில் சூடான வெந்நீரை 5 முதல் 10 டம்ளர் குடித்தால், தொப்பை குறைவதுடன், வயிற்றில் உள்ள கொழுப்பும் கரைந்துவிடும்.
ஒபிஸிட்டியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் சிலர், சதா சர்வகாலமும் எதையாவது சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், அடிக்கடி எதையாவது சாப்பிடவேண்டும் என்கிற எண்ணத்தையும் அவசியத்தையும் தகர்ப்பதுடன், சரியான நேரத்தில் பசி எடுக்கும்.
காலையில் காபி, டீ இவற்றுக்குப் பதிலாக சுக்கு சூப்பை சாப்பிடுவது ஒபிஸிட்டிக்கு நல்லது. மலச்சிக்கலும் ஏற்படாது.
சுக்கு சூப் தயாரிப்பது எப்படி?
செய்முறை: சுக்கு, மிளகு ஆகியவற்றை நன்றாக இடித்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பரங்கிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். தண்ணீர் வற்றியதும், மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.
சுக்கு சூப் தயார்!
பனீர் சாண்ட்விச் தயாரிப்பது எப்படி?
செய்முறை: ஃப்ரை பேனில் சிறிது வெண்ணெயைப் போட்டு உருக்கி, பனீர் சேர்த்து வறுத்து இறக்கவும். உடைந்தாலும் பரவா யில்லை. ஒரு பிரெட்டில் இருபுறமும் வெண்ணெயைத் தடவி, வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காயை வைத்து லேசாக வறுத்த பனீரை வைத்து மற்றொரு பிரெட் துண்டால் மூடி அப்படியே சாப்பிடவேண்டும்.
எச்சரிக்கை: இதற்கு தக்காளி சாஸ், கெச்சப் என்று எதுவும் தொட்டுச் சாப்பிடக்கூடாது.
பரிமாறுவோம்...
==========================================================================
ஜேக்கப்பின் ரெசிபிக்கள் பற்றி சென்னை, விஜயா மருத்துவமனையின் சீனியர் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி அலசுகிறார்...
"பிளாக் டீ மற்றும் காபி
சாப்பிட்டால் மலச்சிக்கல் வரும் என்பது உண்மைதான். அதேசமயம், கொழுப்பு
சேராது என்பதையும் கவனிக்கவேண்டும். இதற்காக பனீர் சாண்ட்விச் சாப்பிடலாம்
என்று ஜேக்கப் சொல்வதையும் கடைபிடிக்கலாம். ஒபிஸிட்டி இருப்பவர்கள்
கொஞ்சமாக பால் பொருட்கள் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை. உடலை
சுறுசுறுப்பாக்கும் என்பதும் உண்மைதான். பனீரில் அதிகமாக புரொட்டீனும்,
மிகச்சிறிய அளவே கொழுப்பும் இருக்கிறது. பனீர் மற்றும் வெண்ணெய்
ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றாலும், அளவுகளை குறைத்துக்
கொள்ளவேண்டும்" என்று சொன்னார்.பின்குறிப்பு: டயட்டீஷியனின் சிபாரிசுகளை ஏற்றுக் கொண்டு, அதன் படியே, சிறு மாற்றங்கள் செய்யப்பட்ட ரெசிபியைத்தான் தந்திருக்கிறார் செஃப்.
Post a Comment