'சர்க்கரை'யை சடுதியில் குறைக்கும் வாழைப்பு கஞ்சி !...ஹெல்த் ஸ்பெஷல்,
கிச்சன் கிளினிக் ! ...
https://pettagum.blogspot.com/2013/06/blog-post_5729.html
கிச்சன் கிளினிக் !
பரம்பரையாக
வருவது ஒருபுறமிருக்க, நாம் பார்க்கும் வேலைகளின் தன்மை, உணவுப்
பழக்கவழக்கங்கள் என்று எல்லாவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதாலும்
நீரிழிவு நோய் வந்துவிடுகிறது. வயது வித்தியாசமில்லாமல் தாக்குதல் நடத்தும்
இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலக அளவில் இந்தியாவில்தான்
அதிகம்.
உண்மையில் இதைக் குறைபாடு என்றுதான் சொல்ல வேண்டும். இதைக் கட்டுப்படுத்த மருந்துகள் சாப்பிடுவதுதான் ஒரே தீர்வு என்று நினைக்க வேண்டாம். மிக முக்கியமாக உணவுக் கட்டுப்பாடு இருந்தாலே... முழு வாழ்நாட்களையும் சுவாரஸ்யமாக அனுபவிக்க முடியும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எப்போதும் சரியான விகிதத்தில் இருக்கவேண்டும். எதுவும் சாப்பிடாதபோது சர்க்கரையின் அளவு 80 முதல் 110 (MG/D) மில்லிகிராம் வரை இருக்கலாம்.
சாப்பிட்டபிறகு 2 மணி நேரம் கழித்து 82 முதல் 120 (Mg/DI) மில்லிகிராம் வரை இருக்க வேண்டும்.
இதையெல்லாம் தாண்டினால், நீரிழிவு நோய் வந்துவிட்டது என்று புரிந்து கொள்ளலாம். கிட்னி, நரம்புகள், கண், இதயம் தொடர்பான பிரச்னைகளை இந்தநோய் கொண்டு வரும். தாம்பத்திய உறவிலும் ஈடுபாடு குறைந்துவிடும்.
அதீத தாகம், கண்ணை கட்டுகிற பசி, அடிபட்டு ஆறாத புண், திடீரென உடல் எடை குறைவு, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தெரிந்தாலே, வருடம் ஒருமுறை, சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்லும் 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி,
"பொதுவாகவே குறிப்பிட்ட
நேரத்தில் சாப்பிடுங்கள். அடிக்கடி விரதமிருப்பதை முற்றிலும் தவிருங்கள்.
வாக்கிங், உடற்பயிற்சி போன்றவற்றால் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்கு
கொண்டுவந்து விடலாம். முக்கியமாக கடைபிடிக்கவேண்டியது...
உணவுக்கட்டுப்பாடு'’ என்று அழுத்தம் கொடுத்து முடித்தார்.
''சர்க்கரையின் அளவை சடுதியில் குறைக்க, பிடியுங்கள் இரண்டு ரெசிபிகள்'' என்றபடியே, ஆரம்பித்த செஃப் ஜேக்கப், படபடவென்று போட்ட பட்டியல் இதோ...
செய்முறை: புருக்கோலியை பொடியாக நறுக்குங்கள். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும், மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம் மிருதுவாக வெந்ததும்... உப்பு, மீதமுள்ள மிளகுத்தூள், கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
சப்பாத்தியுடன் தொட்டுச் சாப்பிடலாம்.
செய்முறை: கடாயில் நெய், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிரியாணி இலையைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். தக்காளி, இஞ்சித்துருவல், வாழைப்பூ போட்டு வதக்கி, அரிசியைப் போட்டு 2 நிமிடம் கிளறவும். அரிசியில் எண்ணெய் ஏறும் வரை கிளறி, உப்பு போட்டு, கூழாக வேகத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். இறக்கி, கொத்தமல்லி, புதினா சேர்த்துப் பரிமாறலாம்.
ரெசிபியை சொல்லி முடித்த ஜேக்கப், "இது சாப்பிட சற்று கசப்பாக இருக்கும். ஆனால், உடம்பில் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, வயிற்றை லூஸாக வைத்திருப்பதில் வாழைப்பூ கில்லாடி. இந்தச் சமையலை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம்'' என்று டிப்ஸ§ம் கொடுத்தார்.
இதைக் கேட்டு முடித்துவிட்டு, "பேஷ்... பேஷ்... இரண்டுமே சர்க்கரைக்கு சரியான சவுக்கடி கொடுக்கும் ரெசிபிகள்தான்'' என்று ஆமோதித்தார் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி.
'சர்க்கரை'யை சடுதியில் குறைக்கும் வாழைப்பு கஞ்சி ! |
'காபியில
சர்க்கரை குறைவா போடணுமா... இல்லை சுத்தமாவே வேணாமா...?' வீடுகளில்தான்
என்றில்லை, டீ கடை, ஹோட்டல் எங்கு போனாலும் இப்படி மரியாதையாக கேட்பது
இப்போதெல்லாம் அதிகரித்திருக்கிறது. உண்மையில் அதிகரித்திருப்பது...
சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய்.
உண்மையில் இதைக் குறைபாடு என்றுதான் சொல்ல வேண்டும். இதைக் கட்டுப்படுத்த மருந்துகள் சாப்பிடுவதுதான் ஒரே தீர்வு என்று நினைக்க வேண்டாம். மிக முக்கியமாக உணவுக் கட்டுப்பாடு இருந்தாலே... முழு வாழ்நாட்களையும் சுவாரஸ்யமாக அனுபவிக்க முடியும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எப்போதும் சரியான விகிதத்தில் இருக்கவேண்டும். எதுவும் சாப்பிடாதபோது சர்க்கரையின் அளவு 80 முதல் 110 (MG/D) மில்லிகிராம் வரை இருக்கலாம்.
சாப்பிட்டபிறகு 2 மணி நேரம் கழித்து 82 முதல் 120 (Mg/DI) மில்லிகிராம் வரை இருக்க வேண்டும்.
இதையெல்லாம் தாண்டினால், நீரிழிவு நோய் வந்துவிட்டது என்று புரிந்து கொள்ளலாம். கிட்னி, நரம்புகள், கண், இதயம் தொடர்பான பிரச்னைகளை இந்தநோய் கொண்டு வரும். தாம்பத்திய உறவிலும் ஈடுபாடு குறைந்துவிடும்.
அதீத தாகம், கண்ணை கட்டுகிற பசி, அடிபட்டு ஆறாத புண், திடீரென உடல் எடை குறைவு, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தெரிந்தாலே, வருடம் ஒருமுறை, சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்லும் 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி,
''சர்க்கரையின் அளவை சடுதியில் குறைக்க, பிடியுங்கள் இரண்டு ரெசிபிகள்'' என்றபடியே, ஆரம்பித்த செஃப் ஜேக்கப், படபடவென்று போட்ட பட்டியல் இதோ...
புருக்கோலி பிரட்டல்
தேவையானவை:
புருக்கோலி (காலிஃப்ளவர் போலவே இருக்கக்கூடிய காய்கறி) - ஒரு பூ, சின்ன
வெங்காயம் - ஒரு கப், பூண்டு - 10 பல், கறிவேப்பிலை - சிறிதளவு,
மிளகாய்த்தூள், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.செய்முறை: புருக்கோலியை பொடியாக நறுக்குங்கள். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும், மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம் மிருதுவாக வெந்ததும்... உப்பு, மீதமுள்ள மிளகுத்தூள், கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
சப்பாத்தியுடன் தொட்டுச் சாப்பிடலாம்.
வாழைப்பூ கஞ்சி
தேவையானவை:
முழு வாழைப்பூவிலிருந்து எடுக்கப்பட்ட பூக்கள் - 25, சீரக சம்பா அரிசி - 2
டேபிள்ஸ்பூன், நெய் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
பிரியாணி இலை - 1, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய
கொத்தமல்லி, புதினா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி -
ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கடாயில் நெய், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிரியாணி இலையைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். தக்காளி, இஞ்சித்துருவல், வாழைப்பூ போட்டு வதக்கி, அரிசியைப் போட்டு 2 நிமிடம் கிளறவும். அரிசியில் எண்ணெய் ஏறும் வரை கிளறி, உப்பு போட்டு, கூழாக வேகத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். இறக்கி, கொத்தமல்லி, புதினா சேர்த்துப் பரிமாறலாம்.
ரெசிபியை சொல்லி முடித்த ஜேக்கப், "இது சாப்பிட சற்று கசப்பாக இருக்கும். ஆனால், உடம்பில் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, வயிற்றை லூஸாக வைத்திருப்பதில் வாழைப்பூ கில்லாடி. இந்தச் சமையலை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம்'' என்று டிப்ஸ§ம் கொடுத்தார்.
இதைக் கேட்டு முடித்துவிட்டு, "பேஷ்... பேஷ்... இரண்டுமே சர்க்கரைக்கு சரியான சவுக்கடி கொடுக்கும் ரெசிபிகள்தான்'' என்று ஆமோதித்தார் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி.
Post a Comment