ஹோம் டிப்ஸ்...! நெல்லிப்பொடியும், மணத்தக்காளியும்:
நெல்லிப்பொடியும், மணத்தக்காளியும்: நெல்லிப் பொடி கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி, புளிக்காத மோரில் கலந்து, கடுகு, பச்சை மிளகாய் தாளித்து, ப...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_2013.html
நெல்லிப்பொடியும், மணத்தக்காளியும்:
நெல்லிப் பொடி கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி, புளிக்காத மோரில் கலந்து, கடுகு, பச்சை மிளகாய் தாளித்து, பெருங்காயம், உப்பு சேர்த்தால், நெல்லி தயிர் பச்சடி ரெடி. புளியோதரை, மிளகுக் குழம்பு சாதம், காரக் குழம்பு சாதம் ஆகியவற்றுக்குத் தொட்டுக் கொள்ளலாம். வாரம் இரு முறை இதைச் சாப்பிட்டு வந்தால், தலைமுடிக்கு போஷாக்கு கிடைக்கும்.
இதே போல், மணத்தக்காளி கீரையையும் பச்சடி செய்யலாம். மணத்தக்காளி கீரையைச் சுத்தமாகக் கழுவி, பச்சையாகவே மிக்சியில் அரைத்துத் தயிருடன் கலந்துச் சாப்பிட்டு வந்தால், வயிறு, வாய் புண் நாளடைவில் குணமாகும்.
Post a Comment