சமையல்....டிப்ஸ்.... டிப்ஸ்..! & சமையலில் செய்யக்கூடாதவை!
ச மையலில் செய்யக்கூடாதவை! காபிக்கு பால் நன்றாகக் காயக்கூடாது. மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. கீரைகளை மூடிபோட்டு சமைக்ககூடா...

- காபிக்கு பால் நன்றாகக் காயக்கூடாது.
- மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
- கீரைகளை மூடிபோட்டு சமைக்ககூடாது.
- தக்காளியையும் வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
- பிரிட்ஜில் வாழைப்பழத்தையும் உருளைக்கிழங்கையும் வைக்கக்கூடாது.
- குழம்போ, பொரியலோ அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லியை போடக்கூடாது.
- பெருங்காயம் தாளிக்கும்போது, குலாம்ஜாமூன் பொரிக்க எண்ணெய் நன்றாக காயக்குடாது.
- தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்ககூடாது.
- ரசம் அதிகமாக கொதிக்கக் கூடாது..
வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.
* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.
* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.
* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.
* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்கவேண்டும்.
* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஊற வேண்டும்.
* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.
* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
* குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.
* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

Post a Comment