அம்மா ரெசிப்பி; சர்க்கரையை கட்டுப்படுத்தும் பாகற்காய்ப் புட்டு! உணவே மருந்து!!
அம்மா ரெசிப்பி; சர்க்கரையை கட்டுப்படுத்தும் பாகற்காய்ப் புட்டு 'எ ங்க வீட்டில் நாட்டுக்காய்களை தான் அதிகம் பயன்படுத்துவேன். பாகற்கா...
https://pettagum.blogspot.com/2014/06/blog-post_7024.html
அம்மா ரெசிப்பி; சர்க்கரையை கட்டுப்படுத்தும் பாகற்காய்ப் புட்டு
'எங்க
வீட்டில் நாட்டுக்காய்களை தான் அதிகம் பயன்படுத்துவேன். பாகற்காய் என்றாலே
பலர் உணவில் சேர்ப்பது கிடையாது. காரணம், அதன் கசப்பு. ஆனால் என் வீட்டில்
அப்படி இல்லை.
பாகற்காயில் செய்த கூட்டு, பொரியல், புட்டு, வறுவல், வற்றல் என்றால்
அனைவருமே ஒரு பிடிபிடிப்பார்கள். இந்த புட்டை சாதத்தில் பிசைந்து நெய்
விட்டு, சாப்பிடச் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு கொடுத்து, பழக்கப்
படுத்தலாம். வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றி, வயிற்றைச் சுத்தப்படுத்தும்' -
என்கிற சென்னை பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்த
ஆர்.புஷ்பா, பாகற்காய் புட்டு செய்யும் முறையை விவரிக்கிறார்.
தேவையானவை: பாகற்காய்
- 5, கடலைப் பருப்பு - அரை கப், வெங்காயம் - 2, சோம்பு தூள், கடுகு,
மிளகாய் தூள் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 இலை, உப்பு -
தேவைக்கேற்ப, பச்சை மிளகாய் - 2, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், நெய் - 4
டீஸ்பூன்.
செய்முறை:
பாகற்காயைச் சிறுதுண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து
வேகவிடவும். கடலைப் பருப்பை ஊறவைத்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல்
மிக்ஸியில் அரைக்கவும். பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை
மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பாகற்காய் வெந்ததும் நீரை வடித்து
பிழிந்து கொள்ளவும். கடலை மாவையும், பாகற்காயையும் வதக்கவும். இதில்,
உப்பு, மிளகாய் தூள் தூவிக் கிளறவும். புட்டு வதங்கியவுடன் நல்ல மணம்
பரவும். அடுப்பை அனைத்துவிட்டு சோம்புதூளைத் தூவி இறக்கவும்.
கற்பகம், டயட்டீஷியன்: பாகற்காய் சர்க்கரை
நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தத்தில்
சர்க்கரையின் அளவு குறையும். இதில் வைட்டமின்கள், தாது உப்புக்கள்
நிறைந்துள்ளது. இதன் கசப்புதான் இனிப்பைக் குறைக்கும் மருந்தாக இருக்கிறது.
கசப்பு என்பதால், சிலர் சர்க்கரை சேர்த்து, பொரியல் செய்வார்கள்.
சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்க்கலாம்.
Post a Comment