நவரத்ன குருமா -- சமையல் குறிப்புகள்,
நவரத்ன குருமா தேவையானப் பொருட்கள் * காளிஃப்ளவர் - 100 கிராம் * காரட் - 100 கிராம் * பட்டாணி - 200 கிராம் * உருளைக்கி...

தேவையானப் பொருட்கள்
* காளிஃப்ளவர் - 100 கிராம்
* காரட் - 100 கிராம்
* பட்டாணி - 200 கிராம்
* உருளைக்கிழங்கு - 200 கிராம்
* பீன்ஸ் - 50 கிராம்
* பொடியாக நறுக்கிய அன்னாசிப்பழம் - அரை கப்
* திராட்சை பழம் - 100 கிராம்
* முந்திரிப்பருப்பு - 10
* எலுமிச்சம் பழம் - அரை கப்
* தேங்காய் - ஒரு மூடி
* பெரிய வெங்காயம் - ஒன்று
* பச்சைமிளகாய் - 6
* கொத்தமல்லி - 3 தேக்கரண்டி
* பெருஞ்சீரகம் - அரை தேக்கரண்டி
* கசகசா - ஒரு மேசைக்கரண்டி
* கிஸ்மிஸ் - ஒரு மேசைக்கரண்டி
* எண்ணெய் - கால் குழிக்கரண்டி
* உப்பு - சிறிது
* மல்லிச்செடி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
* தயிர் - ஒரு கப்
* மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
செய்முறை
* காய்கறிகளை கழுவி சுத்தம் செய்து பொடியாக ஒரே அளவாக வெட்டவும்.
* அன்னாசிப் பழங்களை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* தேங்காயை சில்லாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* மிக்ஸியில் தேங்காய் சில் ஒன்றையும், முந்திரிப்பருப்பையும் போட்டு தனியாக அரைத்து எடுக்கவும்.
* பச்சைமிளகாய், பெருஞ்சீரகம், கசகசா, ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* குக்கரில் எண்ணெய் விட்டு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழம், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
* அத்தோடு அரைத்த மசாலையும், காய்கறிகளையும் போட்டு வதக்கி அரைத்த தேங்காய், முந்திரிப்பருப்பை சேர்த்து வேக வைக்கவும்.
* நன்கு குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய மல்லித் தழையைத் தூவி எலுமிச்சம் பழம் பிழிந்து இறக்கவும்.
* பிறகு குருமா சிறிது ஆறியதும் வெட்டி வைத்த அன்னாசி பழங்களைச் சேர்த்து பரிமாறவும்.
Post a Comment