சரவண பவன் ஹோட்டல் சாம்பார் --- சமையல் குறிப்புகள்,
தேவையானப் பொருட்கள் துவரம்பருப்பு - 1/4 டம்ளர் கத்திரிக்காய் - ஒன்று முருங்கைக்காய் - ஒன்று சாம்பார் வெங்காயம் - 10 தக்...

- தேவையானப் பொருட்கள்
- துவரம்பருப்பு - 1/4 டம்ளர்
- கத்திரிக்காய் - ஒன்று
- முருங்கைக்காய் - ஒன்று
- சாம்பார் வெங்காயம் - 10
- தக்காளி - ஒன்று
- பச்சைமிளகாய் - 2
- உப்பு - தேவைக்கு
- புளி - சிறிய லெமன் அளவு
- அரைப்பதற்கு:
- பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
- தக்காளி - ஒன்று (பெரியது)
- தேங்காய் - ஒரு ஸ்பூன்
- சாம்பார்பொடி - 4 ஸ்பூன்
- பெருங்காயம் - சிறிது
- தாளிக்க:
- கடுகு - 1/4 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
- வற்றல்மிளகாய் - ஒன்று
- கறிவேப்பிலை, மல்லி இலை - தேவைக்கு
- முதலில் பருப்பை வேக வைக்கவும். காய்கறிகளை பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கவும்.
- வேகவைத்த பருப்புடன், 4 டம்ளர் நீர் விட்டு நறுக்கிய காய், பச்சை மிளகாய், தக்காளி, பாதி வெங்காயம் போட்டு உப்பு சேர்த்து வேக விடவும்.
- அரைக்க கூறியவற்றை மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்து அதனுடன் புளியையும் கரைத்து ஒன்றாக, கொதிக்கும் சாம்பாரில் விடவும்.
- காய் வெந்தவுடன் உப்பு சரி பார்த்து இறக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு பொரிந்ததும் பெருங்காயம், கிள்ளிய வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கி சாம்பரை அதில் ஊற்றவும். மல்லி இலை போட்டு கொதித்ததும் இறக்கவும்
Post a Comment