தேவையானவை: சதுரமாக நறுக்கிய சுரைக்காய், சர்க்கரைவள்ளிக்
கிழங்கு துண்டுகள் - தலா ஒரு கப், முருங்கைக்காய், தக்காளி - தலா 2,
பொடியாக நறுக்கிய கோங்கூரா (புளிச்ச கீரை) - கால் கப், காய்ந்த மிளகாய் -
8, பூண்டு - 5 பல், கடுகு - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி,
தண்ணீரில் வேக வைத்து ஒரு ஸ்பூனால் சதைப்பற்றை தனி யாக வழித்து எடுக்கவும்
(கொட்டை சேர்க்க வேண்டாம்). சுரைக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக
வைத்து எடுக்கவும். 6 மிளகாய் வற்றலை ஒரு டீஸ்பூன் கடுகு டன் ஊற வைத்து,
மையாக அரைக்கவும். பூண்டை, மிகவும் பொடியாக நறுக்கவும்.
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு மீதி கடுகை தாளிக்கவும். நறுக்கிய
கோங்கூரா, தக்காளி சேர்த்து வதக்கவும். வெந்த சுரைக்காய், சர்க்கரைவள்ளிக்
கிழங்கு சேர்க்கவும். பிறகு, முருங்கை விழுது, அரைத்த மிளகாய் - கடுகு
விழுது சேர்க்கவும். பின்னர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தளதளவென
கொதிக்கும்போது அடுப்பை அணைத்து, பரிமாறும் பாத்திரத் துக்கு மாற்றவும்.
எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பூண்டை பொரித்துப் போடவும். கறிவேப்பிலையை
அப்படியே சேர்த்துக் கொள்ளவும். இது ஆந்திராவின் பிரபல மான உணவு வகை.
இட்லி, தோசை, சப்பாத்தி என்று எதனுடனும் சாப்பிடு வதற்கு ஏற்ற அருமையான
சைட் டிஷ்.
.
தப்பளம்: புளிச்ச கீரை கிடைக்கா விட்டால், வேறு கீரையை
பயன் படுத்தி இதை தயாரிக்கலாம். அப்படி செய்யும்போது,சிறிதளவு எலுமிச்சை
சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Post a Comment