மீண்டும் டெங்கு... தகர்க்க ஐந்து வழிகள்!--ஹெல்த் ஸ்பெஷல்,
மீண்டும் டெங்கு... தகர்க்க ஐந்து வழிகள்! க டந்த இரு வாரங்களில் மட்டும் 10 பேர் உயிரைப் பறித்து இருக்கிறது டெங்கு. அரசின் அலட்சியம், மரு...
https://pettagum.blogspot.com/2012/10/blog-post_8071.html
மீண்டும் டெங்கு... தகர்க்க ஐந்து வழிகள்!
கடந்த இரு வாரங்களில் மட்டும் 10 பேர் உயிரைப் பறித்து இருக்கிறது டெங்கு. அரசின் அலட்சியம், மருந்துப் பற்றாக்குறை... இவற்றை எல்லாம் மாற்றுவது இந்த நாட்டில் சிரமம். ஆனால், நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வது சுலபம். என்ன செய்யலாம்? சொல்கிறார் பொது நல மருத்துவர் ராஜாமணி கருணாநிதி.
டெங்குக்குக் காரணம் 'ஏடிஸ் எஜிப்டி’ என்கிற வகையைச் சேர்ந்த கொசு. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு, பாதிப்பு இல்லாத மற்றொருவரைக் கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவும். ஆனால், தும்மல், இருமல் போன்றவற்றின் மூலம் இந்தக் காய்ச்சல் பரவுவது இல்லை.
சூரிய உதயத்தில் இருந்து இரண்டு மணி நேரம், அஸ்தமனத்தில் இருந்து இரண்டு மணி நேரம்... இதுதான் பெரும்பாலும் இந்தக் கொசு கடிக்கும் நேரம்.
104 டிகிரிக்கு மேல் காய்ச்சல், கடும் தலை வலி, கண் வலி, குமட்டல், உடல் வலி, மூட்டு வலி, வாந்தி, உடலில் அரிப்பு ஆகியவை டெங்குவின் அறிகுறிகள்.
டெங்கு காய்ச்சல் வந்தால், உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்து, உறுதியானால், அதற்கேற்ற சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம்.
டெங்குவைத் தடுக்கத் தடுப்பு மருந்து கிடையாது. அதேபோல, பிரத்யேகமான சிகிச்சை யும் கிடையாது. சாதாரணக் காய்ச்சலுக்கு உரிய மருந்தே இதற்கும். லட்சக்கணக்கில் உள்ள ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையை வெறும் ஆயிரம் என்கிற அளவுக்கு டெங்கு கொண்டுவந்துவிடுவது டெங்கு ஏற்படுத்தும் பெரும் அபாயம். இப்படிக் கடுமையான ரத்தத் தட்டு இழப்பைச் சந்திப்பவர்களுக்கு ரத்தத் தட்டு அணுக்கள் ஏற்ற வேண்டி இருக்கும். எனவே, கால தாமதம் இல்லாமல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதான் முக்கியம்.
டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச் சத்தைக் குறைத்துவிடும். எனவே, மருந்துகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு நீர்ச் சத்து மிக்க இளநீர், கஞ்சி, உப்பு-சர்க்கரைக் கரைசல் என்று நீராகாரமாக அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். 7 நாட்களில் இருந்து 14 நாட்கள் வரை டெங்கு பாதிப்பு இருக்கலாம்.
டெங்குவைத் தவிர்க்க ஒரே வழி... சுற்றுச்சூழலை - குறைந்தபட்சம் வீட்டைச் சுற்றியேனும் சுத்தமாகவைத்துக்கொள்வது. வீட்டைச் சுற்றி உரல், வாளி, தேங்காய் சிரட்டை போன்ற தேவையற்ற இடங்களில் தண்ணீர் தேங்காமல் உலர்வாக வைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர்த் தொட்டிகளைக் கொசு நுழையாத வகையில் மூடிவையுங்கள். வீட்டுக்குள் கொசுக்கள் நுழைய முடியாதபடி செய்யுங்கள்!
சூரிய உதயத்தில் இருந்து இரண்டு மணி நேரம், அஸ்தமனத்தில் இருந்து இரண்டு மணி நேரம்... இதுதான் பெரும்பாலும் இந்தக் கொசு கடிக்கும் நேரம்.
104 டிகிரிக்கு மேல் காய்ச்சல், கடும் தலை வலி, கண் வலி, குமட்டல், உடல் வலி, மூட்டு வலி, வாந்தி, உடலில் அரிப்பு ஆகியவை டெங்குவின் அறிகுறிகள்.
டெங்கு காய்ச்சல் வந்தால், உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்து, உறுதியானால், அதற்கேற்ற சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம்.
டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச் சத்தைக் குறைத்துவிடும். எனவே, மருந்துகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு நீர்ச் சத்து மிக்க இளநீர், கஞ்சி, உப்பு-சர்க்கரைக் கரைசல் என்று நீராகாரமாக அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். 7 நாட்களில் இருந்து 14 நாட்கள் வரை டெங்கு பாதிப்பு இருக்கலாம்.
டெங்குவைத் தவிர்க்க ஒரே வழி... சுற்றுச்சூழலை - குறைந்தபட்சம் வீட்டைச் சுற்றியேனும் சுத்தமாகவைத்துக்கொள்வது. வீட்டைச் சுற்றி உரல், வாளி, தேங்காய் சிரட்டை போன்ற தேவையற்ற இடங்களில் தண்ணீர் தேங்காமல் உலர்வாக வைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர்த் தொட்டிகளைக் கொசு நுழையாத வகையில் மூடிவையுங்கள். வீட்டுக்குள் கொசுக்கள் நுழைய முடியாதபடி செய்யுங்கள்!
Post a Comment