எரிபொருள் சிக்கனம்,-- கிச்சன் டிப்ஸ்!
எரிபொருள் சிக்கனம் அரிசி மற்றும் நவதானிய பருப்பு பொருட்களை தண்ணீரில் ஊறவைத்துவிட்டு வேகவைத்தால் சீக்கிரமே வெந்துவிடும். இதனால் எரிவாய...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_8453.html
எரிபொருள் சிக்கனம்
அரிசி மற்றும் நவதானிய பருப்பு பொருட்களை தண்ணீரில் ஊறவைத்துவிட்டு வேகவைத்தால் சீக்கிரமே வெந்துவிடும். இதனால் எரிவாயு செலவு மிச்சம் ஆகும்.
முடிந்த வரை சின்ன பர்னரை பயன்படுத்தவும்
உணவுகள் சமைக்கும் பொழுது வெளி காற்று அடுப்பை அனைக்காமல் பார்த்துக்கொள்ளவும். நாம் வேறு வேலையாக இருப்போம். அடுப்பு அணைந்து விடுவது தெரியாது. அதால் கேஸ் வீண்ணாகிவிடும்
பாத்திரத்துக்கு மேல் தீ வராமல் குறைந்த தணலில் அடுப்பை எரியவிடவும்
தேவையான சமையல் பொருட்களை எல்லாம் எடுத்து பக்கத்தில் வைத்துக் கொண்டு சமையலில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால் கேஸ் செலவு அதிகமாகிவிடும்.
அரிசியையோ பருப்பு, கறி வகைகள் வேக விடும்போது தேவைக்கு தக்கபடி மட்டும் தண்ணீர் ஊற்றுங்கள். கூடுதல் தண்ணீர் ஊற்றினால் எரிபொருள் அதிகம் செலவாகும்.
பிரஷர் குக்கரில் சமையுங்கள். இதனால் கியேஸ் செலவு கம்மியாகும் நேரமும் மிச்சமாகும
பாத்திரத்தை மூடிவைத்து சமையல் செய்தால் வேலை சீக்கிரம் முடிவதோடு, கேஸ் செலவும் குறையும்.
பிரிஜிலிருந்து எடுத்த பொருட்களை உடனே சமைத்தால் கேஸ் செலவு அதிகமாக்கும், குளிர் போன பிறகு சமைக்கவும்
பர்ணர்களின் அடைப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும
முக்கியமாக அடுப்பில் உணவினை வைத்துவீட்டு டீ.வீ பார்க்காதிங்க
வீட்டில் அனைவரும் ஒரே நேரத்தில் ஒன்றாக சாப்பிடுவது நல்லது. இதனால், அடிக்கடி சூடு செய்து சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படாது.
சமைத்த உணவுகளை ஹாட்பாக்ஸில்போட்டு வைக்கவும்
சமைத்து முடித்தவுடன் தீயை அணைத்ததும், சிலிண்டரையும் ஆப் செய்ய மறந்து விடாதீர்கள்.
இதேல்லாம் செய்தால் நிச்சயம் கேஸ் மிச்சமாகும்
எரிப்பொருள் மிச்சம் அப்படினா பணம்மிச்சம்.
Post a Comment