மிக்ஸ்டு அல்வா--வாசகிகள் கைமணம்
வாசகிகள் கைமணம் மிக்ஸ்டு அல்வா தேவையானவை : உருளைக்கிழங்கு - கால் கிலோ, கேரட் துருவல் - ஒரு கப், பாதாம் பருப்பு - 25, தேங்காய் துருவ...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_9726.html
வாசகிகள் கைமணம்
மிக்ஸ்டு அல்வா
தேவையானவை : உருளைக்கிழங்கு - கால் கிலோ, கேரட் துருவல் - ஒரு கப், பாதாம் பருப்பு - 25, தேங்காய் துருவல் - ஒரு கப், பால் - 300 மில்லி, ரவை - 100 கிராம், சர்க்கரை - 250 கிராம், நெய் - 100 மில்லி, முந்திரிப்பருப்பு - 10, பொடித்த ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை : உருளைக்கிழங்கை வேகவைத்து கட்டி இல்லாமல் உதிர்த்துக் கொள்ளவும். பாதாம் பருப்பை ஊற வைத்து, தோலை உரித்த பின், மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். துருவிய கேரட், தேங்காய் துருவலையும் பால் சேர்த்து தனித்தனியாக அரைக்கவும். அனைத்து விழுது களையும் உதிர்த்த உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அடி கனமான அகன்ற கடாயில் சர்க்கரையோடு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரைந்து கொதித்ததும், ஒரு கரண்டி பால் விட்டால் சர்க்கரையில் உள்ள அழுக்கு ஓரமாக ஒதுங்கும். அதைக் கரண்டியால் எடுத்துவிட்டு... ரவையை சேர்த்து, கொதித்ததும் சிறிது நெய் விட்டு கிழங்கு கலவையை சேர்த்துக் கிளறவும். அடுப்பை 'சிம்’மில் வைத்து, நன்கு கிளறவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் மீண்டும் நெய் விட்டுக் கிளறி இறக்கவும். நெய் தடவிய தட்டில் கொட்டி, முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
மிக்ஸ்டு அல்வா: பாலுடன் சிறிதளவு மில்க்மெய்டும் சேர்த்தால் சுவை கூடும்.
-------------------------------------------------------------------------
Post a Comment