பால் சப்பாத்தி---சமையல் குறிப்பு
பால் சப்பாத்தி * சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிது பால் சேர்த்து பிசைந்தால் கூடுதல் சுவையுடன் சப்பாத்தி சாப்பிடலாம். * தோசைக்கல...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_1831.html
பால் சப்பாத்தி
* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிது பால் சேர்த்து பிசைந்தால் கூடுதல் சுவையுடன் சப்பாத்தி சாப்பிடலாம்.
* தோசைக்கல்லில் தோசை வராமல் இருந்தால் வெங்காயத்தை அதில் தேய்த்துவிட்டு பின் தோசை சுட்டுப் பாருங்கள், நன்றாக வரும்.
* அரிசி, பருப்புகளை பத்திரப்படுத்தி வைக்கும்போது பூச்சிகள் அண்டாமல் இருக்க அதனுடன் சில காய்ந்த வேப்பிலைகளை போட்டு வையுங்கள்.
* முதல் நாள் வாங்கிய கீரையை மறுநாள் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் கீரையின் வேர்ப்பகுதி தண்ணீரில் இருக்குமாறு வைத்திருங்கள். மறுநாள் வரை கீரை வாடாமல் இருக்கும்.
* அப்பளம், வடாம், வற்றல் போன்றவை வைத்திருக்கும் பாத்திரத்தில் சிறிது பெருங்காயத்தை போட்டு வைத்தால் அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.
* காபி போட்டபின் அந்த காபித்தூளை காய வைத்து பாத்திரம் துலக்கினால் பாத்திரங்கள் மின்னும்.
* தேங்காய் சட்னி செய்யும்போது பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்கி, பிறகு அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* மழைக்காலத்தில் தீக்குச்சிகள் பதத்துப்போய் தீப்பற்றாமல் திணறும் சூழல் வரலாம். அந்தப் பிரச்சினை வராமல் இருக்க, தீப்பெட்டிக்குள் சில அரிசி மணிகளை போட்டு விடுங்கள். குச்சிகள் எளிதில் பதத்துப் போகாமல் தீப்பற்ற உதவும்.
***********************************************************************
Post a Comment