நாமினி Vs வாரிசு: சொத்து யாருக்குப் போய்ச் சேரும்?

 நண்பர் ஒருவர் பெருந்தொகை ஒன்றை வங்கியில் 'டெபாசிட்’ செய்திருந்தார். அந்த டெபாசிட்டிற்கு தனது இரண்டாவது மனைவியை நாமினியாக நியமி...

 நண்பர் ஒருவர் பெருந்தொகை ஒன்றை வங்கியில் 'டெபாசிட்’ செய்திருந்தார். அந்த டெபாசிட்டிற்கு தனது இரண்டாவது மனைவியை நாமினியாக நியமித்திருந்தார். இந்நிலையில் அவர் திடீரென இறந்துபோய்விட, அந்த பணம் யாருக்கு போய்ச்சேர வேண்டும் என்பதில் பிரச்னை வந்துவிட்டது. நாமினியாக நியமிக்கப்பட்ட இரண்டாவது மனைவிக்கு சேரவேண்டுமா, அல்லது முதல்மனைவிக்கும் அவர் மூலம் பிறந்த வாரிசுக்கும் போய்ச்சேர வேண்டுமா என்பதில் பயங்கர பிரச்னை! ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளாத குறை!

இந்த பிரச்னை இப்படி என்றால் இன்னொரு நண்பரின் குடும்பத்துக்கு நிகழ்ந்தது வேறுமாதிரியானது. தனது குழந்தைகள் வயதில் மிகச் சிறியவர்களாக இருக்கிறார்களே என நினைத்து, தனது தூரத்து உறவினர் ஒருவரை நாமினியாக எல்லாவற்றுக்கும் நியமித்திருந்தார் அவர். தனக்கு ஏதாவது நேர்ந்தால் உறவினர் மூலமாக தனது முதலீடுகள் குழந்தைகளுக்கு கரெக்ட்டாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு.
ஆனால் நடந்தது வேறு!

நண்பரின் மறைவுக்குப் பிறகு குழந்தைகளுக்கு கொடுக்காமல் தானே சொந்தம் கொண்டாடப் பார்த்தார் அந்த உறவினர்.

இப்படி பிரச்னைகள் எழுவதற்கு காரணம் நாமினி குறித்த தெளிவான பார்வைகள் இல்லாததுதான். ரத்த சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரை நாமினியாக நியமித்தாலோ, அல்லது யாரையுமே நாமினியாக நியமிக்காவிட்டாலோ, சம்பந்தப் பட்டவரின் வாரிசுகள் அந்த சொத்துக்களைப் பெறுவதில் பல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. நாமினிக்கு உள்ள சட்டப்பூர்வமான உரிமைகள் என்ன, கடமைகள் என்ன, வாரிசுகளுக்கு உள்ள உரிமைகள் என்ன என்பது பற்றி வழக்கறிஞர் என்.ரமேஷிடம் கேட்டோம்...

''ஒருவர் ரத்த சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரை நாமினியாக நியமித்துவிட்டு இயற்கை எய்திவிட்டார் என்றால், அவரது முதலீடுகள், சேமிப்புகள், பணிநலன்கள் போன்றவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் யாரிடம் ஒப்படைக்க வேண்டும்? வாரிசுகளிடமா அல்லது நாமினியிடமா என்பது முக்கியமான கேள்வி.

வாரிசுகளிடமிருந்து எவ்வித ஆட்சேபனையும் இல்லாதபோது பலன்/முதலீடு நாமினியிடம் ஒப்படைக்கப் படும். ஒருவேளை வாரிசுகள் ஆட்சேபனை செய்யும் பட்சத்தில், நீதிமன்றத்தை அணுகி உரிய உத்தரவு பெற்று வருபவரிடமே ஒப்படைக்கப்படும்.

ஒருவர் நாமினியை நியமிக்காமலே மறைந்து விட்டால் பிரச்னைகள் எதுவும் இன்றி வாரிசுகளுக்கு அதாவது மனைவி, குழந்தைகள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் இவர்களில் யார் பொருத்த மானவர்களோ அவர்களுக்குப் போய்விடும். பொதுவாக, நாமினி என யாரையும் நியமிக்காதபோது வாரிசுச் சான்றிதழ் (legal heir certificate) அடிப்படையில் சொத்துக்களை/முதலீட்டைத் திருப்பி கொடுப்பார்கள். ஆனால், சில சூழ்நிலைகளில் நீதிமன்றத்தின் மூலம் வாரிசுச் சான்றிதழ் (succession certification) பெற்று அதன் மூலம்தான் பலனைப் பெற முடியும்.

வாரிசு இருக்கும்போது மூன்றாவது நபரை நாமினியாக நியமிக்கலாமா? என்கிற கேள்வியும் பலருக்கு எழக்கூடும். வாரிசுகள் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் இந்த கேள்வி எழுவது நியாயமே. யாரை நாமினியாக நியமிக்க வேண்டும், யாரை நாமினியாக நியமிக்கக் கூடாது என எந்த விதிமுறையும் இல்லை. ஆனால், ரத்த உறவு முறை, பெற்றோர் அல்லது தாரத்தை (spous) நாமினியாக நியமிப்பதுதான் நடைமுறை.

மூன்றாம் நபரை நாமினியாக நியமிக்கும்போது, சட்டரீதியான கேள்வியையும் சந்தேகங் களையும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களே எழுப்பும். உதாரணமாக, ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து உறவினரல்லாத மூன்றாம் நபர் ஒருவரை நாமினியாக நியமிக்கும்போது, இந்த சந்தேகம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டால் நாமினி மீது நிச்சயமாக சந்தேகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சட்டரீதியாக இப்படி ஒரு சந்தேகம் எழும்பட்சத்தில் நாமினியிடம் பணத்தைக் கொடுக்காமல், வாரிசுகளிடமே ஒப்படைக்கப்படும்.

சரி, ஏதோ ஒரு காரணத்திற்காக ரத்த சம்பந்தமில்லாத ஒருவரை நாமினியாக நியமித்து விட்டு மறைந்துவிடுகிறார் ஒருவர். அவர் விட்டுச் சென்ற சொத்துக்களை நாமினியாக இருப்பவர் அபகரிக்க நினைத்தால், அதை வாரிசுதாரர்கள் எப்படி தடுப்பது? இந்த பிரச்னையில் வாரிசுதாரர்களின் உரிமை என்ன? என்று நீங்கள் கேட்கலாம்.

சொத்துக்களைப் பெற்றுக் கொண்ட நாமினி, அதை வாரிசுகளிடம் கொடுக்க மறுத்தாலோ அல்லது அபகரித்தாலோ, நீதிமன்றத்தை நாடலாம். இறந்தவரின் வாரிசு என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பதன் மூலம் இறந்தவரின் சொத்துக்களை, பலனை அல்லது பணத்தை வாரிசுகளிடம் ஒப்படைக்க நாமினிக்கு நீதிமன்றம் உத்தரவிடும்.

ரத்த சம்பந்தமில்லாத ஒருவர் என்னதான் நாமினியாக நியமிக்கப்பட்டிருந்தாலும், இறந்தவரின் சொத்தில் அவருக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சொத்துக்களையோ, பணத்தையோ அல்லது பலனையோ வாரிசுகளிடம் ஒப்படைக்கும் உரிமையும் கடமையும் மட்டுமே அவருக்கு உண்டு!

ஒருவருக்கு ஒரே ஒரு மகன் என்றால் வாரிசு யார் என்கிற பிரச்னை வராது. ஆனால், நான்கைந்து மகன்கள் இருந்தால், இதில் யாரை நாமினியாக நியமிப்பது என்கிற கேள்வியையும் பலர் கேட்கிறார்கள். ஒரே நபர் வாரிசாகவும், நாமினியாகவும், இருக்கும்போது பிரச்னை ஏதும் இல்லை.

ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வாரிசுகளாக இருந்து, அதில் ஒருவர் மட்டும் நாமினியாக நியமிக்கப்படும்போது, குடும்பத்தின் மற்ற வாரிசுகள் ஆட்சேபனை செய்யவில்லை என்றால், நாமினியாக உள்ள வாரிசே சொத்துக்களை பெற்றுக் கொள்ள முடியும். மற்ற வாரிசுகள் ஆட்சேபனை செய்தால் (அதாவது, தங்களுக்கு பங்கு கிடைக்காது என்கிற நிலைமையில்) நீதிமன்றத்தை நாடலாம்.

ஒருவேளை நாமினியாக நியமிக்கப்பட்டவர் இறந்து விட்டாலோ அல்லது பித்துப் பிடித்திருந்தாலோ அது நாமினியாக யாரையும் நியமிக்கப்படாததற்கு சமம். நாமினி நியமிக்கப்படாத போது நேரடியாக வாரிசுகளிடம் சொத்துக்கள், பணம் அல்லது பலன்கள் கொடுக்கப்படும். அதேபோல திருமணத்துக்கு முன் செய்திருந்த டெபாசிட்டுகள் மற்றும் பாலிசிகளில் திருமணத்துக்கு பின் மனைவி மற்றும் குழந்தைகள் பெயரை நாமினியாகச் சேர்ப்பதும் குழப்பங்கள் வராமலிருக்க உதவும்.''

கஷ்டப்பட்டு சம்பாதிப்பது வாரிசுகள் அனுபவிக்கத்தான். அதற்கு சிக்கலில்லாத வகையில், நடந்து கொள்ளும் நேர்மையானவர்களையே நாமினியாக நியமனம் செய்யுங்கள்.

குறிப்பு: இங்கே சொத்து என குறிப்பிடப்படுவது அசையும் சொத்து மட்டுமே; அசையா சொத்து அல்ல.

Related

உபயோகமான தகவல்கள் 8863956965386528238

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item