இஃப்தார் நோன்பு ஸ்பெஷல்! ஓட்ஸ் பிரியாணி கஞ்சி!
இ ஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில் 30 நாள்கள் நோன்பிருப்பது கடமையாக்கப்பட்டுள்ளது. ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ...

சூரியன் அஸ்தமனமான பிறகு (மாலை 6 மணி வாக்கில்) நோன்பை முடித்துக்கொள்வது வழக்கம். நோன்பு முடிப்பதற்கு ‘இப்தார்’ என பெயர். இஃப்தாரில் உண்ணுவதற்கான சிறப்பு உணவுகளின் ரெசிப்பிகளை அளிக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹசீனா செய்யது.
------------------------------------------------------------------------------------------------------------------------
ஓட்ஸ் பிரியாணி கஞ்சி
தேவையானவை:
செய்முறை:
குக்கரில் நெய்யை ஊற்றி சூடாக்கி... பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும். இதனுடன் கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, கைமா, தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, தயிர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும். காய்கறிகள் நன்கு வதங்கிய பின் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறி மூடி, ஒரு விசில் விடவும். பிறகு திறந்து எலுமிச்சைச் சாறு, தேங்காய்பால் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும், தண்ணீர் கொதிக்கும்போது ஓட்ஸை சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். நன்கு வெந்த ஓட்ஸை காய்கறி - கைமா கலவையுடன் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு:
கைமாவைத் தவிர்த்து காய்கறிகளை மட்டும் வைத்தும் செய்யலாம்.
Post a Comment