வீட்டுக்குறிப்புக்கள்! டிப்ஸ்.. அசத்தல் டிப்ஸ்..
டிப்ஸ்.. அசத்தல் டிப்ஸ்.. இஞ்சி டீயை அதனுடைய இயல்பான அதிக காரத்துடன் குடிக்க விரும்புறீர்களா? முதலில் தண்ணீரில் இஞ்சியைப் போட்டுக் கொதிக்க ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_680.html
டிப்ஸ்.. அசத்தல் டிப்ஸ்..
இஞ்சி டீயை அதனுடைய இயல்பான அதிக காரத்துடன் குடிக்க விரும்புறீர்களா? முதலில் தண்ணீரில் இஞ்சியைப் போட்டுக் கொதிக்க வைத்து, அதன் பிறகு டீத்தூளை போட்டுத் தயாரித்தால் டீ நல்ல காரமாக இருக்கும். ‘டீ காரமாக வேண்டாம்.. ஆனால், அதனுடைய மணமும் குணமும் வேண்டும்’ என்றால் டீத்தூள் கொதித்த பிறகு, இஞ்சியைத் துருவிப் போட்டால் சுவையும் மணமும் தூக்கலாக இருக்கும்.
எலுமிச்சை பழங்களின் தோலை வெயிலில் காயவைத்து, குளியல் பொடியான சீயக்காயுடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால், ஷாம்பூவுக்கு பதிலாக இந்த சீயக்காய் பவுடரை உபயோகித்துக் கொள்ளலாம். வெயில் நேரத்தில் உடலுக்குக் குளிர்ச்சி தரக் கூடிய நிவாரணி இது.
தோசைமாவு அதிகம் புளித்து விட்டதா? அதனுடன் ஒரு கரண்டி பால் சேர்த்துக் கொள்ளுங்கள். புளிப்பு சுவை குறைந்து மாவு நன்றாக இருக்கும். ஒருவேளை தோசைமாவு ஏற்கெனவே நீர்த்திருந்தால் பாலில் இரண்டு டீஸ்பூன் ரவை, மற்றும் அரிசி மாவு சேர்த்து அதனுடன் கலந்துவிட்டால் மேலும் நீர்த்துப் போகாது.. புளிப்பும் தெரியாது.
ஸ்கூல் திறக்கும் நேரம். புது யூனிஃபார்ம் வாங்கியிருப்பீர்கள். அதனால் பழைய யூனிஃபார்ம்களை தூக்கி எறிந்து விட வேண்டாம். பழைய பினோஃபார்ம், ஸ்கர்ட்டுகளை வெட்டி தலையணை உறைகளாகவும் பைகளாகவும் தைத்துக் கொள்ளலாம். ஒருவேளை அவை சாயம் போய் இருந்தால், அந்த இடத்தில் மட்டும் சின்ன எம்ப்ராய்டரி போட்டு விடுங்கள். பையின் கைப்பிடிக்கு பினோஃபார்மின் ஸ்ட்ராப்ஸ் பகுதியை வெட்டி தைத்துக் கொண்டால் சூப்பரான பை ரெடி!
Post a Comment