கூடுதல் வீட்டுக் கடன் பெற: இணை கடன்தாரரை சேர்த்துக் கொள்ளுங்கள்! உபயோகமான தகவல்கள்!!

கூடுதல் வீட்டுக் கடன் பெற: இணை கடன்தாரரை சேர்த்துக் கொள்ளுங்கள்! அதிகமான வீட்டுக் கடன் பெற ஓர் எளிய வழி, வேறு ஒருவரை நம்மோடு சேர்த்...

கூடுதல் வீட்டுக் கடன் பெற: இணை கடன்தாரரை சேர்த்துக் கொள்ளுங்கள்!

அதிகமான வீட்டுக் கடன் பெற ஓர் எளிய வழி, வேறு ஒருவரை நம்மோடு சேர்த்துக்கொண்டு வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பது. இவர்களுக்கு இணை கடன்தாரர் (கோ- அப்ளிகேன்ட்) என்று பெயர். இணை கடன்தாரராக யாரையெல்லாம் நியமித்துக்கொள்ள முடியும், இணை கடன்தாரரின் பணி என்ன என்பது குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஓய்வுபெற்ற உதவி பொதுமேலாளர் ஆர்.கணேசனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

''வீட்டுக் கடன் வாங்குபவருக்கான தகுதி குறைவாக இருக்கும்போது இணை கடன்தாரரைச் சேர்த்துக்கொள்ளலாம். இணை கடன்தாரரின் வருமானத்தையும் கணக்கில்கொண்டு வீட்டுக் கடன் வழங்கப்படும். இதனால் ஒருவருக்குக் கூடுதல் கடன் கிடைக்கும். 

மேலும், வீட்டுக் கடன் வாங்கும்போது, கேரன்டர் கையெழுத்துத் தேவைப்படும். சிலருக்கு கேரன்டர் கையெழுத்துப் போடுவதில் சிக்கல் வரும். அதாவது, கேரன்டர் கையெழுத்துப் போடுவதற்கு எனக்கு யாரும் இல்லை என்பார்கள்.  

கேரன்டர் கையெழுத்து வாங்க முடியாதவர்கள், ரத்த உறவுகளாக இருப்பவர்களை இணை கடன்தாரர்களாக நியமித்து, கடன் வாங்கிக்கொள்ளும் வசதியை வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் உருவாக்கி வைத்துள்ளன.

பொதுவாக, கடன் வாங்குபவரின் மனைவி, மகன், மகள் ஆகியோரை இணை கடன்தாரர்களாக நியமித்துக் கொள்ள முடியும். 

இணை கடன்தாரரின் பெயரில் பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. 

வீட்டுக் கடன் வாங்குபவரின் பெயரில் மட்டும் வீட்டை பதிவு செய்துகொள்ளலாம். 

அதாவது, அப்பா வாங்கும் கடனுக்கு மகன் இணை கடன்தாரராக இருக்கலாம். அதேபோல மகன் வாங்கும் கடன் தொகைக்கு அப்பா கையெழுத்திட முடியும்.
அதேசமயம், அப்பாவின் பெயரில் சொத்து இருந்து வருமானம் இல்லை என்றாலும், அவரை இணை கடன்தாரராக நியமித்துக்கொள்ள முடியும். 

இணை கடன்தாரராக இருப்பவர்கள் இஎம்ஐ செலுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. 

ஆனால், சிபில் ரிப்போர்ட்டைப் பார்க்கும்போது இணை கடன்தாரர் பெயரும் இருக்கும். அதாவது அவரின் பெயரிலும் கடன் இருப்பதாகவே காண்பிக்கும். எனவே, இணை கடன்தாரர் தனியாக வேறு கடனுக்கு விண்ணப்பிக்கும்போது கிடைக்கும் கடன் தொகையின் அளவு குறைய வாய்ப்புள்ளது.  


இணை கடன்தாரர் தனியாக வீட்டுக் கடன் அல்லது வேறு ஏதாவது கடனுக்காக விண்ணப்பிக்கும்போது ஏற்கெனவே இருக்கும் கடன் தொகை இருவருடைய பெயரிலும் இருப்பதாகவே காட்டும். அந்தச் சமயம், என் அப்பாவின் பெயரில்தான் வீடு உள்ளது. இஎம்ஐயும் அவரே செலுத்துகிறார்; நான் வெறும் இணை கடன்தாரர்தான் என்பதை நிரூபிக்க தேவையான ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். 

இதனுடன் அப்பா, வீட்டுக் கடன் வாங்கியதற்கான கடன் ஒப்புகை கடிதத் தையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
இணை கடன்தாரர் இஎம்ஐ செலுத்தினால் அந்தத் தொகைக்கான வரிச் சலுகை பெறலாம். 

அதேசமயம்,  முதல் கடன்தாரர் கடன் தொகையைச் செலுத்தவில்லை எனில் இணை கடன்தாரர்தான் அந்தக் கடனுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். மீதமுள்ள கடன் தொகையை இணை கடன்தாரர் செலுத்த வேண்டியிருக்கும். இதைச் செய்யத் தவறினால் கடன் தந்த வங்கியானது இணை கடன்தாரர் மீது நடவடிக்கை எடுக்கும்.

அண்ணனுக்கு தங்கையை இணை கடன்தாரராக நியமிப்பதில் சிக்கல் வரும். அதாவது, திருமணமான தங்கையாக இருந்தால் சிக்கல் வர வாய்ப்புள்ளது. இந்தச் சமயம், தங்கையை கேரன்டராக வங்கி மாற்றிவிடும். எனவே, வங்கிக்கு வங்கி இணை கடன்தாரரை நியமிப்பது வித்தியாசப்படும்.
கடன் வாங்குவதற்கு முன்பே இணை கடன்தாரராக யாரை நியமிக்கப் போகிறோம் என்பதைக் கடன் வாங்குபவர் திட்டமிட்டுக்கொள்வது நல்லது'' என்றார் கணேசன்.

வீட்டுக் கடன் வாங்குகிறவர்கள் இதைக் கவனிக்கலாமே!

Related

உபயோகமான தகவல்கள் 486812822715017874

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item