முகப் பருக்களை முற்றிலும் போக்கலாம்! சித்த மருத்துவத்தில் தீர்வு! அழகு குறிப்புகள்!!
முகப் பருக்களை முற்றிலும் போக்கலாம்! சித்த மருத்துவத்தில் தீர்வு! பெ ண்களின் பொதுவான கவலை - முகப்பருக்கள்...

https://pettagum.blogspot.com/2014/02/blog-post_1847.html
முகப் பருக்களை முற்றிலும் போக்கலாம்!
சித்த மருத்துவத்தில் தீர்வு!
பெண்களின்
பொதுவான கவலை - முகப்பருக்கள். பருவ வயதில், பருக்களும் கூடவே வரும். இது
'ஹார்மோன் மாற்றத்தால் வருவதுதான்’ என்றாலும், '' 'என்ன... முகமெல்லாம்
இப்படி முத்து முத்தா... எண்ணெயில் பொரிச்சதைச் சாப்பிட்டா
இப்படித்தான்...’ 'ராத்திரி படுக்கறப்ப ஜாதிக்காய் இழைச்சுப் பூசு’ ''
என்று ஆளாளுக்கு அட்வைஸ் செய்யும்போது, இன்னும் மன உளைச்சல் தலைதூக்கும்.
பருக்கள் ஏன் வருகின்றன.. என்னென்ன சிகிச்சைகள் உண்டு..
உணவில் எதையெல்லாம் தவிர்க்கலாம் என்பது பற்றி விவரிக்கிறார் சென்னையைச்
சேர்ந்த சித்த மருத்துவர் பத்மபிரியா.
பரு உருவாகக் காரணம்
வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களில் ஏதேனும்
ஒன்றில் இடையூறு ஏற்படுவதுதான் பரு வருவதற்குக் காரணம் என்கிறது சித்த
மற்றும் ஆயுர்வேத மருத்துவம். அதிக வறட்சி, அதிக உஷ்ணம், அதிகக் கொழுப்பு
- இவை மூன்றுமே முகப் பருக்களாகப் பிரதிபலிக்கும். இதைத் தவிர, அதிக மன
உளைச்சல், சமச்சீரற்ற ஹார்மோன்கள், எண்ணெய் சுரப்பிகள் அதிகம் சுரப்பதால்
முகத்திலுள்ள நுண் துளைகள் அடைபடுதல், மலச்சிக்கல் மற்றும் பொடுகுத் தொல்லை
இவை எல்லாமே மிக முக்கியக் காரணங்கள்.
சிகிச்சை முறைகள்
சருமத்துக்கு வெளிப்புறத்தில் சிகிச்சை எடுப்பதைவிட,
உள்ளுக்குள் மருந்து சாப்பிட்டால்தான், பருத் தொல்லைக்கு நிரந்தரத் தீர்வு
கிடைக்கும். எதனால் வந்தது என்ற மூலகாரணத்தைத் தெரிந்து, அதற்கு சிகிச்சை
எடுத்துக்கொண்டால், பருவை முற்றிலும் போக்கலாம். இதற்கு குறைந்தபட்சம் ஆறு
வாரங்களாவது சிகிச்சை மேற்கொள்ளவேண்டும். சித்த வைத்திய முறையில்,
ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, இந்தப் பிரச்னையைத் தீர்க்க, சிறந்த மருந்துகள்
உள்ளன.
உணவு முறை மாற்றம்!
பருக்களுக்கு, நாம் உண்ணும் உணவும் ஒரு காரணம். சருமப்
பிரச்னை இருப்பவர்களுக்கு, கொழுப்புத் தாதுவும் ரத்தத் தாதுவும்
சீர்கெடுகிறது. எனவே, ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, கொழுப்பைக் குறைப்பதற்கான
உணவுதான் தேவை.
ரத்தத்தைச் சுத்திகரிப்பதில், முக்கியப் பங்கு
வகிக்கும் கல்லீரலைப் பலப்படுத்த, கரிசலாங்கன்னிக் கீரை, பொன்னாங்கன்னிக்
கீரை, உலர் திராட்சை, வைட்டமின் ஏ நிறைந்த கேரட், பப்பாளி, மஞ்சள் நிறக்
காய்கறிகள் பழங்களையும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இவை ரத்தத்தில்
இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, சுத்திகரிக்க உதவுகின்றன. நாள்
ஒன்றுக்கு, குறைந்தது 3 லிட்டராவது அவசியம் தண்ணீர் அருந்த வேண்டும்.
மனசே ரிலாக்ஸ்!
மனதை எப்போதும் ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ள வேண்டும். மன
அழுத்தமும் பருக்களை அதிகப்படுத்திவிடலாம். இதற்கு ஆழமான சுவாசப் பயிற்சி
மிகவும் உதவும். ரன்னிங், ஜாகிங் போன்றவை, ஆக்ஸிஜன் வழங்கலை அதிகரிக்கும்
பயிற்சிகள். இதனால், சருமத்துக்குப் புத்துணர்வு கிடைப்பதுடன், மன
அழுத்தத்தில் இருந்தும் விடுபட உதவும்.
தவிர்க்க வேண்டியவை:
நச்சுக்களை வெளியேற்றும் நன்னாரி டீ
10 கிராம் நன்னாரி
வேருடன் மல்லி விதை, பெருஞ்சீரகம் தலா அரை டீஸ்பூன் சேர்த்து, நன்றாகப்
பொடிக்கவும். இதில், ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, ஒரு
டம்ளராகச் சுண்டியதும் வடிகட்டவும். தினமும் காலையிலும் மாலையிலும் இந்த
டீயை அருந்தி வரவும். ரத்தத்திலிருக்கும் நச்சுக்களை வெளியேற்றி,
செரிமானத்தைச் சீராக்கி, குளிர்ச்சியைத் தரும். நோய்த் தொற்றும்
போய்விடும்.
நலங்கு மாவு
சோப்புக்குப்
பதிலாக, இந்த நலங்கு மாவைத் தேய்த்துக் குளிக்கலாம். ஒரு கிலோ பாசிப்
பயறுடன், 50 கிராம் சந்தனம் மற்றும் கோரைக் கிழங்கு, கிச்சிலிக் கிழங்கு
தலா 100 கிராம், கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், விளாமிச்சை வேர், கார்போக
அரிசி (இவை அனைத்துமே நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) தலா 200 கிராம்
சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்கு காயவைத்து, மிஷினில் கொடுத்து
அரைத்துப் பயன்படுத்தலாம்.
Post a Comment