சமையல் குறிப்புகள்! களிப்பூட்டும் `மோர்க் களி'
மோர்க்களி. தேவையான பொருட்கள் அரிசி மாவு - 1 கப் புளித்த மோர் - 1 கப் எண்ணை - 12 டேபிள் ஸ்பூன் கடுகு - 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 ட...

https://pettagum.blogspot.com/2011/06/blog-post_2792.html
மோர்க்களி.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 1 கப்
புளித்த மோர் - 1 கப்
எண்ணை - 12 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
மோர் மிளகாய் - 4
இஞ்சி விழுது - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை
* அரிசி மாவில் புளித்த மோரை கொட்டி, உப்பை போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
* அடிகனமான வாணலி அல்லது நான்-ஸ்டிக் தவாவில் 6 டேபிள் ஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகு வெடிக்கவிட்டு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சிவக்க வறுக்கவும்.
* இப்போது இஞ்சி விழுது, மோர் மிளகாய் சேர்த்து சிறிது வதக்கவும்.
* தொடர்ந்து மோரில் கரைத்து வைத்துள்ள அரிசி மாவை ஊற்றி, நன்கு கிளறி மாவு வெந்து பளபளவென வருகையில் மேலும் மீதமுள்ள எண்ணை விட்டு நன்கு கிளறவும்.
* ஒரு தட்டில் சிறிது எண்ணை தடவி கிரீஸ் செய்து, அதில் வெந்த மோர்க்களியைப் போட்டு எண்ணை தடவிய கத்தியினால் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
குறிப்பு
* எண்ணை பூசிய சிறிய கோப்பைகளில் மோர்க்களியை போட்டு கூம்பாகக் கவிழ்த்தால் அழகிய கப் வடிவுடன் மோர்க்களி பார்ப்பவரை ஈர்த்து சாப்பிட வைக்கும்.
* தினம் மீந்து போகும் சிறிதளவு மோரை 4 அல்லது 5 நாட்கள் சேர்த்து வைத்து அந்த புளித்த மோரை உபயோகித்தும் மோர்க்களி செய்யலாம்.
-------------------------------------------------------------------------------------------------
Post a Comment