ஹோமியோபதி மருத்துவம்-2

மூச்சு - மூட்டு - மூலம் என் வயது எழுபது. எனக்கு நீண்ட நாட்களாகவே ஆஸ்துமா தொல்லை ஆபத்தாக இருந்து வருகிறது. இதற்காக நிறைய மருந்துகள், சிரப்...

மூச்சு - மூட்டு - மூலம் என் வயது எழுபது. எனக்கு நீண்ட நாட்களாகவே ஆஸ்துமா தொல்லை ஆபத்தாக இருந்து வருகிறது. இதற்காக நிறைய மருந்துகள், சிரப்புகள், இன்ஹேலர்கள் என்று உபயோகித்து கடைசியில், இது வயிற்றுப்புண்ணை உண்டாக்கிவிட்டு மூலச்சூட்டில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. மூலம் என்றால், இரத்த மூலம். கடுமையான மலச்சிக்கல். ஆசனவாய் அரிப்பு / எரிச்சல். இந்தத் தொந்தரவுகளின் தொடர்ச்சியாக இப்போது இரண்டு மூட்டுகளிலும் வலி O/A Knees என்கிறார். இதற்கு வலி நிவாரணிகள் தான். இதைப் பயன்படுத்தினால், வயிறும், மூலமும் புண்ணாகும் என்கிறார். மூன்று உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பரிதாபமாக இருக்கிறேன் நான். என் மருத்துவக் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆலோசனை சொல்வீர்களா? மூட்டு, மூலம், மூச்சுப் பிரச்சினையை முறியடிக்க முடியும். ஹோமியோபதி நோய் என்பதனை அடிப்படையாகக் கொள்ளாமல், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட நபருடைய உடல்நிலை, மனநிலையை முன்வைத்து செயல்படுகிறது. தாங்கள் LEDUM 30, GUAIACUM 200 ஆகிய இரண்டு ஹோமியோபதி மருந்துகளை TWO DRACHM PILLS அளவில் வாங்கி, ஒவ்வொன்றிலும் பத்து மாத்திரைகளை ஒரு நாளைக்கு காலை, இரவு என்று இரண்டு வேளைக்கு உணவிற்கு முன்னர் மூன்று வாரங்கள் சாப்பிடுங்கள். ---------------------------------------------------------------------------------- வயிறுக்கு வருத்தம் எனக்குக் கொஞ்சம் காரமான பொருளைச் சாப்பிட்டாலே வயிற்றைக் கலக்கி எடுக்கிறது. சாப்பிட்டது போய் இப்போது பயத்தாலே பலமடங்கு கலக்குகிறது. குடலின் செரிமானத் தன்மை என் குடிப்பழக்கத்தால் குறைந்து மலக்குடலும் வீக்காகிவிட்டது என்கிறார் நிபுணர். எனக்கு குடித்தால்தான் பொழுது விடியும் என்ற நிலைமை, ஆக குடிக்கு ‘நோ’ சொல்லமாட்டேன். அடிக்கடி மலம் கழிப்பதால் அமீபியாசிஸ் இருக்கலாமோ என்று பயந்து மலப்பரிசோதனை செய்து பார்த்ததில் ஒன்றுமே இல்லை. எனக்கு அரசாங்கத்தில் மிகவும் பொறுப்பான, டென்ஷனான வேலை. என் முழு குறிப்புகளையும் தங்களின் பார்வைக்கு இணைத்துள்ளேன். மருந்துகளை எழுதுங்களேன். வயிற்றில் வருத்தம் வராமலிருக்க என்ன வழி? பெருங்குடலும், மலக்குடலும் அரித்துவிட்டதைச் சொல்லுகின்றன, பரிசோதனை முடிவுகள். தாங்கள் கலக்கப்படாமல், கலங்காமல் கையில் எடுங்கள் ஹோமியோபதி மருந்துகளை. MERC.COR 200, TROMBIDIUM 200 ஆகிய இரண்டு ஹோமியோபதி மருந்துகளை TWO DRACHM PILLS அளவில் வாங்கி, ஒவ்வொன்றிலும் பத்து மாத்திரைகளை ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைக்கு உணவிற்கு முன்னர் இரண்டு வாரங்கள் சாப்பிடுங்கள். குடிக்கு ‘குட்பை’ சொல்லலாம். ------------------------------------------------------------------------------- மயக்கமான மயக்கம். எனக்கு வயது நாற்பது. முதலில் இலேசான மயக்கம் இருந்தது. பிறகு இது கடுமையான போது, கழுத்து வலி இருப்பதால் தான் இப்படி என்றார் மூட்டு நிபுணர். VERTIN 24 mg இரண்டு வேளை சாப்பிட்டும் மயக்கம் கேட்காதபடியால் கழுத்தை MRI SCAN செய்து பார்த்தோம். கழுத்து எலும்பு தேய்ந்து, கால்சியம் சத்து மிகக் குறைவாக உள்ளதே மற்றும் மூளைக்குச் செல்கின்ற இரத்தம் தடைபடுவதுமே மயக்கத்திற்கான காரணம் என்று தயக்கமில்லாமல் பல துறை நிபுணர்கள் தங்கள் கருத்துக்களைச் சொல்லிவிட்டார்கள். பரிதவிப்பது என்னவோ நான் தான். அவர்கள் என்ன செய்வார்கள்? என் அனைத்து ரிப்போர்ட்டுகளையும் மற்றும் மருந்துச் சீட்டுகளையும் தங்கள் பார்வைக்கு அனுப்பி உள்ளேன். மயக்கமோ... மயக்கம். என்ன செய்வது என்பதில் தயக்கமோ தயக்கம். எல்லாம் குணமாக தாங்கள் BENZ ACID 200, CIMICIFUGA 200 ஆகிய மருந்துகளை TWO DRACHM PILLS அளவில் வாங்கி, ஒவ்வொன்றிலும் பத்து மாத்திரைகளை ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைக்கு உணவிற்கு முன்னர் மூன்று வாரங்கள் சுவைத்துச் சாப்பிடுங்கள். மேற்கொண்டும் தாங்கள் ஹோமியோபதி மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள். ------------------------------------------------------------------------------ காதைக் காக்க... எனக்கு எப்போதும் சீழ்வடியும் காதுகள்தான். மருத்துவர் நரம்புப்பிரச்னை, எலும்புப்பிரச்னை, சளி, சைனஸ் என்று அடுக்கிக் கொண்டே போகிறார். எனக்கென்னவோ எது செய்தாலும் இது குணமாகாது என்றே தோன்றுகிறது. இதனால் எனக்குப் பொதுவான காது கேட்கும் திறன் குறைவாகவே உள்ளது. MRI,, எக்ஸ்ரே என்று ஏகப்பட்ட பரிசோதனைகள். எக்கச்சக்க செலவுகள். எனக்கு எதை எழுதி, எதைக் காப்பாற்றிக் கொள்வது என்றே புரியவில்லை. என் ரிப்போர்ட்டுகள் அனைத்தையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன். நான் சொல்வதைத் தாங்கள் ‘காது’ கொடுத்துக் கேட்க வேண்டுகிறேன். கேட்டால் காதைக் காப்பாற்றலாம். இதனை Csom என்பார்கள். . Capsicum 200, Verbascum 200 ஆகிய இரண்டு ஹோமியோபதி மருந்துகளை Two Drachm Pillis அளவில் வாங்கி, ஒவ்வொன்றிலும் பத்து மாத்திரைகளை ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைக்கு உணவிற்கு முன்னர் சுவைத்துச் சாப்பிடுங்கள். தொடர்ந்து பதினைந்து நாட்கள் சாப்பிட்ட பிறகு, எனக்கு காது கேட்பது பற்றியும், காதைக் காப்பாற்றியது பற்றியும் சொல்லுங்கள். --------------------------------------------------------------- செரிமானம் அவமானம் எனக்கு அல்சர் பிரச்சனை வயிற்றை அரித்துக்கொண்டேதான் அடிக்கடி இருக்கிறது. பல மருந்துகளைச் சாப்பிட்டுப் பார்த்தும் பலனில்லாமல் போனதுதான் மிச்சம். எனக்குத் தொடர்ந்து ஏப்பம், ஏப்பமாக வந்துகொண்டே இருக்கிறது. வாயுக் கோளாறால், வாத நோயால் வேறு நான் பாதிக்கப்பட்டு உள்ளேன். வாயிலும் புண்கள். வாயும், வயிறும், வாதமும் என்னை வாட்டி வதைக்கின்றன. செரிக்கவில்லை. நெஞ்சிலே நிற்பது போன்ற உணர்வே, உண்மையாக உள்ளது. நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல் என எரிந்தது எக்கச்சக்கம். ‘எண்டோஸ்கோப்பி’, வயிறு முழு ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் ஒன்றுமில்லை என்கிறார்கள். ஒன்றுமில்லாத ஒன்றுக்கு இவ்வளவு இம்சையா? எனக்கான தீர்வுதான் என்ன? தங்களுக்கான செரிமானம் பெரும் அவமானமாக இருக்கிறது என்பதனை நாசுக்காகவும், நயம்படவும் சொல்கிறீர்கள். இனி எல்லாம் சுகமாக, தாங்கள் Carboveg 200, Asafoetida 200ஆகிய இரண்டு ஹோமியோபதி மருந்துகளை Two Drachm Pills அளவில் வாங்கி, ஒவ்வொன்றிலும் பத்து மாத்திரைகளை ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைக்கு உணவிற்கு முன்னர் பதினைந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிடுங்கள். நிறைய பயோ கெமிக் மருந்துகளும், கூட்டுக் கலவை மருந்துகளும், சிலவகை மருந்துகளின் தாய் திரவங்களும் இப்பிரச்சனையைத் தீர்க்கும். -------------------------------------------------------------------- தொட்டால் தொழுநோய்! நான் தொழுநோயாளிகளுக்குத் தானம் செய்வதுண்டு. இந்த வியாதி இதுவரை தொற்றாது என்றுதான் நினைத்திருந்தேன். சிவந்த, வெளிர்ந்த உணர்ச்சியற்ற தேமல், தொழு நோயின் ஆரம்ப அறிகுறி என்கிறார்கள் நிபுணர்கள். எனக்குத் தோலில் இப்படிப்பட்ட தொல்லை வந்தபோது, தொழுநோயாக இருக்குமோ என்று அஞ்சி அலறிவிட்டேன். எனக்கு அதனை நினைக்கும்போதே வெறுப்பாகவும், மனம் வெறுமையாகவும், மிகவும் அழுகையாகவும் வருகிறது. சில சமயங்களில் தொழுநோயாளிகளின் கைவிரல்கள், பாதங்கள் என் உடலின் அதே இடங்களில் படுவதுண்டு. தொட்டாலே தொல்லை தானா? என் மருத்துவக் குறிப்புகள், நான் சாப்பிட்ட மருந்துகள் என அனைத்தையும் இணைத்துள்ளேன். இதனை தெளிவுபடுத்த வேண்டுகிறேன். மனம் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். தொழுநோயில் பல வகைகள் உண்டு. ஒரு வகை மட்டும், அதுவும் தங்களுக்குத் திறந்த புண்கள் இருந்தால் மிகவும் நெருக்கமாக இருக்கும், அதே புண்களின் சீழைக் கொண்ட நோயாளிகளிடம் இருந்து தங்களுக்கு வர இல்லை, வருவதற்கான வாய்ப்பு தான் உள்ளது என்று கூற முடியும். தங்களுக்கு இருப்பது அழுக்குத் தேமல்தான். இது சரியாக Graphites என்கிற ஹோமியோபதி skin ointment ஐ இரவில் இரண்டு வாரங்கள் தடவுங்கள். மேற்கொண்டும் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறலாம். ------------------------------------------------------------------ வீக்னஸ் வீரிய மருந்து எனக்கு உடம்பில் பொதுவான பிரச்சனைகள் என்று எதுவுமே இல்லை. Master Health Checkup செய்துகொண்டு விட்டேன். அந்த விஷயத்தில் அதில் மட்டும் எனக்குக் கடுமையான வீக்னஸ் உள்ளது. விரைப்பு இல்லை, வீரியம் இல்லை. விரைந்து விஷயத்தை முடிக்க முடியவில்லை. முயன்றும் முயலாமைகள்! இருந்தும் இயலாமைகள்! இப்படிப் போகிறது என் கதை. மனைவி திருப்தி இல்லை என்ற ஒரே ஒரு மந்திரத்தையே மாற்றி மாற்றிச் சொல்கிறார். நானும் மருந்துகளை மாற்றி, மாற்றித்தான் சாப்பிட்டுப் பார்க்கிறேன். சரிவரவில்லை. மனநல நிபுணர், பாலியல் வல்லுநர் என் பிரச்சனைகளைத் தீர்க்க என் மனமே நல்ல மருந்து என்கிறார்கள். உங்கள் கருத்தென்ன? மனமது மருந்தானால் மானிடருக்கு ஒரு குறையும் இல்லையே! மனக் குரங்கு ஆட்டுவிப்பதைத்தானே மனிதனால் தாங்கிக் கொள்ள முடியாமல் தாழ்ந்து போகிறான். மனமது செம்மையானால், மருந்துகளுக்குச் செலவில்லை. தங்கள் வீக்னஸைப் போக்க Agnus 200, Bufo 30 ஆகிய இரண்டு மருந்துகள் உள்ளன. இவற்றை முறையான/ திறமையான ஹோமியோபதி நிபுணரின் மேற்பார்வையில் சாப்பிட்டால் வீரியம், விரைவில் கிடைக்கும். உடன் நிபுணரைச் சந்தியுங்கள். மனக்கவலை மாற்றல் அரிது என்றாலும் தாங்கள் மாற்ற வேண்டும். ------------------------------------------------------------------- தனித்தன்மை என் வயது நாற்பத்தாறு. சர்க்கரைக்கான சரியான மருந்துகளைச் சாப்பிட்டுக்கொண்டு, இன்சுலின் 60 Unit போட்டுக்கொண்டாலும் எனக்கு சர்க்கரை வெறும் வயிற்றிலேயே 200-க்கு மேல் இருக்கிறது. சாப்பிட்ட பிறகு சர்ரென்று ஏறி 350-க்கு மேல்! இதனை மருத்துவரிடம் முதல் முறையாகச் சொல்லும்போது மருந்துகளை மாற்றிக் கொடுத்தார். ஒன்றுமே குறையவில்லை. இப்படி இருப்பது சிலரின் உடம்புக்கான தனித்தன்மை என்று சொல்லி, இது விஷயத்தில் இனி செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்றும் சொல்லிவிட்டார். என் மூன்று வருட இரத்தக் கொதிப்பு / கொலஸ்ட்ரால் / சர்க்கரை சங்கடங்கள் என அனைத்தையும் தங்களின் மேலான பார்வைக்கு இணைத்துள்ளேன். இதனை Metabolic Disorder என்று சொல்வார்கள். தங்கள் உடம்புக்கு சர்க்கரைக்கான மருந்துகளுக்கான எதிர்ப்புத் தன்மையைப் பெற்று விட்டது என்றே இதற்கு அர்த்தம். இதுபோன்ற பல நோய்கள் சிலருக்கு வருவதுண்டு. இங்குதான் மாற்றுமுறை மருத்துவங்களின் மகிமைகள் போற்றிப் புகழப்படுகின்றன. ஹோமியோபதியில் உள்ள Insulin, Inula, Cephalandra, Symnema, Abroma Augusta, Syzygium போன்ற மருந்துகள் இதுபோன்ற தனித் தன்மையின் உடல் பிரச்சனைகளைத் தனியாகவே தீர்த்து வைப்பவை. ----------------------------------------------------------------------------- விஷயமே விந்தில் என் வயது இருபத்தெட்டு. இருபத்தெட்டிலேயே இருட்டில் இவ்வளவு பிரச்சனைகளா? என்றால் என்னால் என்னதான் சொல்ல முடியும்? கனவு காணுங்கள் என்றால் காண்கிறேன். கற்பனைக் குதிரைகள் மின்னல் வேகத்தில் ஓடுகின்றன. கட்டுக்கடங்காமல் திரிகின்றன. இரவே இனிமை இல்லாமல் இம்சைகளின் இறுதிவடிவமாக இருந்து என்னை இறப்புக்குத் தள்ளுகிறது. கனவு மெய்ப்படட்டும் என்றால், விந்து கைலியை நனைத்து வெளிப்பட்டுவிடுகிறது. விடலைப் பருவ விந்து பிரச்சனைகளுக்கு என்னதான் விடை? ஒவ்வொரு நிபுணர்கள் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்களே? இதில் எது மெய்? எது பொய்? நிஜம் எது நிழல் எது? கனவுகளைக் குறை சொல்லாதீர்கள். கனவுகள் நம் மனக்காவலாளிகள். மனதின் தற்காப்புக் கலைகளில் கனவும் ஒன்று. இல்லை என்றால் தினவெடுக்கும் திருமண வயதில் திக்குமுக்காடிப் போவீர்கள். பாலியலில் / விடலைப் பருவத்து விஷயங்களில், வில்லங்கங்களில் எது மெய், எது பொய்? இங்குதான் பாலியல் கல்வியின் அவசியம், அவசியமாகிறது. அவசரமாகிறது. இந்த வயதில் இது இயல்பு/ இயற்கை என்றால் என்னை நம்பமாட்டீர்கள். விந்து விட்டு நொந்த கதை உங்களுடையதுதானே. Aconite, Igntia உதவும். ------------------------------------------------------------------------- தடையற்ற தாம்பத்தியத்திற்கு எங்களுக்குத் திருமணமாகி, முப்பது வயதாகியும் குழந்தையில்லை. ஆறு வருட ஆற்றாமைகள் ஆழ் நெஞ்சில் அமுங்கிக் கிடக்கின்றன. குழந்தைக் குறை /குற்றம் இருப்பதனாலேயே எங்களால் தாம்பத்திய வாழ்க்கையில் ருசியை அனுபவிக்க முடியவில்லை. இரண்டறக் கலந்து இன்பம் இதுவரை இருந்ததேயில்லை. மற்ற தோழிகள் சொல்லும்போது பொறாமையாக இருக்கிறது. தலைவிதியை எப்படித் தகர்க்க முடியும்? தறிகெடட்டும். உறவில் உணர்வில்லை. உணர்வின் உணர்ச்சி ருசி இல்லை. ரசிப்பு இல்லை. ஈர்ப்பு இல்லை. மொத்தத்தில் முழு விளையாட்டுமே சரியில்லை. தெளிவில்லை. இதனால் இருவருக்கும் உடல் நலக் குறைகள் வேறு வந்துள்ளது. மருத்துவக் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. தங்கு தடையற்ற தாம்பத்தியத்திற்குத் தரமான வழியைக் கேட்கிறீர்கள். தவறாமல் சொல்கிறேன். குழந்தையின்மை மனது என்று ஒன்றிருக்கிறது. அதிலிருந்து முட்டையை உடைத்து வெளிவரும் குஞ்சு போல் தாங்கள் வெளியேற வேண்டும். இதற்கான ஆலோசனைகளை, நேரில் நிறைய சொல்லி தாம்பத்தியத்திற்கும், தந்தையாவதற்கும், தாயாவதற்கும் வழிகளை உண்டாக்க முடியும். நிச்சயம் பிறக்கும் குழந்தை. தாங்கள் கவலைப்படாமல் ஹோமியோபதி நிபுணரை நேரில் அணுகுங்கள். ------------------------------------------------------------------------------------ சிறுசிறு சிக்கல்கள் எனக்குத் தொடர்ந்து உடம்பில் சில, சில சிக்கல்கள் இருந்து கொண்டே இருக்கிறது. அடிக்கடி சளி பிடித்துக் கொள்கிறது. தொண்டை தொல்லை வருகிறது. தலை வலி உள்ளது. ஏதேனும் தொல்லைகள் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்வே நரகமாக என்னை நசுக்கி எடுக்கிறது. வதைபடும் வாழ்வின் சக்கரங்களில் சிக்கிச் சின்னா பின்னாமாகிறேன். எப்போதும் நார்மலாகவே நான் இல்லை. இதற்கும் உள்ளம்தான் காரணம் என்கிறார் மனநலநிபுணர். உடலின் பிரச்சனைகள், உள்ளத்தின் உளைச்சல்கள் என்று மாறி மாறி என்னைத் தாக்கி எடுக்கின்றன. இதற்கு என்னதான் வழி? தங்களுக்கு உடலின் பொதுவான நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே சிறு சிறு சிக்கல்களுக்கும், மனச்சிதைவிற்கும் காரணம். காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டால், காரியத்தைக் கச்சிதமாக முடித்துவிடலாம். RHUSTOXIM, ARNICA 200 ஆகிய இரண்டு ஹோமியோபதி மருந்துகளை TWO DRACHM PILLS அளவில் வாங்கி, ஒவ்வொன்றிலும் பத்து மாத்திரைகளை ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைக்கு உணவிற்கு முன்னர் இரண்டு வாரங்கள் சுவைத்துச் சாப்பிடுங்கள். மேற்கொண்டும் தாங்கள் நிபுணரின் ஆலோசனையைப் பெறலாம். ------------------------------------------------------------------------- உணவால் உஷ்ணம் எனக்குப் பொதுவாகவே கனச்சூடான உடம்பு. பித்தம் அதிகம். நரம்புத்தளர்ச்சியும் என்னை நடுநடுங்க வைக்கிறது. எனக்கு இப்போது சர்க்கரை வியாதி வேறு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உணவுக்கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சிகளையும் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறேன். எனக்கென்னவோ என் முழு நரம்புகளும் உடல் உஷ்ணத்தால் உருகி, வேலையைச் செய்ய மறுக்கின்றனவோ என்ற கவலை இருந்துகொண்டே இருக்கிறது. உணவால் உடம்பு உஷ்ணமானால் / அசைவப் பொருட்களை அன்றாடம் அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் அதிகமாகி நரம்புகளை நலமாக்காமல் இருக்கச் செய்யுமா? விரிவாக விளக்குங்கள். சர்க்கரை நோய்க்கான Diet பார்த்து, மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடுங்கள். உணவில் சர்க்கரை உயரும். மற்றபடி உஷ்ணம் என்பதெல்லாம் உள் மன உணர்தல்களே! தங்களுக்கு இப்போது Diabetic Neuropathy. இதனை முறைப்படி குணப்படுத்த ஏராளமான மருந்துகள் ஹோமியோபதியில் உள்ளன. Colchicum, Arnica, Guaiacum, Ledum, Kalmia, Symphytum, Syphilinum போன்ற மருந்துகள் நரம்புக்கும், தளர்ச்சிக்கும், சர்க்கரைக்கும் உகந்த உன்னத மருந்துகள்.

Related

ஹோமியோபதி மருத்துவம் 7375801916862491882

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item