டிப்ஸ்...டிப்ஸ்....சமையல் குறிப்புகள்,
பூண்டு எளிதாக உரிக்க பூண்டு எளிதாக உரிப்பதற்கு சிறிது நேரம் வெயிலில் காய வைத்து உரிக்க வேண்டும் தயிர் புளிக்காமல் இருக்க தயிரில் ஒரு தேங்காய...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_3066.html
பூண்டு எளிதாக உரிக்க
பூண்டு எளிதாக உரிப்பதற்கு சிறிது நேரம் வெயிலில் காய வைத்து உரிக்க வேண்டும்
தயிர் புளிக்காமல் இருக்க
தயிரில் ஒரு தேங்காய் துண்டு போட்டு வைத்தால் தயிர் புளிக்காமல் இருக்கும்
இஞ்சி பூண்டு விழுது கலர் மாறாமல் இருக்க
இஞ்சி பூண்டு விழுது டன் சிறிது உப்பு சிறிது எண்ணெய் சேர்த்து வைத்தால் கலர் மாறாமல் அப்படியே இருக்கும்
பிரியாணியின் சுவை அதிகரிக்க
பிரியாணி செய்வதற்கு முன் சிக்கனை தயிர் இஞ்சி பூண்டு மஞ்சள் பொடி போட்டு 15 நிமிடம் ஊறவைத்து பின் பிரியாணி செய்தால் பிரியாணியின் சுவை அதிகரிக்கும்
உப்புமா ருசியாக இருக்க
எந்த உப்புமா செய்தாலும் இறக்குவதற்கு முன் இரண்டு ஸ்பூன் கெட்டி தயிர் சேர்த்து கிளறி இறக்கினால் உப்புமா ருசியாக இருக்கும்
பாகற்காய் பழுக்காமல் இருக்க
பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
புளியோதரை சூப்பராக இருக்க
ஒரு டேபிள் ஸ்பூன் தனியா மிளகு 6 இரண்டையும் வறுத்து பொடியாக்கி புளிகாய்சலை சாதத்துடன் கிளறும்போது சேர்த்து கலந்து பிசைந்தால் புளியோதரை சூப்பராக இருக்கும்
ரவா உப்புமா
ரவா உப்புமா செய்யும்போது பாதி தண்ணீரும்,பாதி தேங்காய் பால் அல்லது பசும்பால் சேர்த்து செய்தால் உப்புமா மிகவும் சுவையாக இருக்கும்.
மெதுவடை
மெதுவடை செய்யும்போது உளுந்தை சரியாக 1/2 மணிநேரம் ஊறவைத்தால் போதும்.முக்கால் பாகம் ஊறியும்,கால் பாகம் ஊறாமலும் இருப்பது தான் சரியானபதம்.
பாகற்காய்
பாகற்காயை எப்படி செய்தாலும் கசக்கும்.அதற்க்கு காயை அறிந்து முதலில் உப்பு போட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறிய பிறகு,புளித்தண்ணீரில் 10நிமிடம் ஊறவைத்து கழுவி சமைத்தால் கசப்பு ஒரளவு குறையும்.
ரசம் ருசி அதிகரிக்க
தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
Post a Comment