ஹெல்த் டிப்ஸ்... டிப்ஸ்....!
மருதாணி நன்கு சிவக்க போடும் முன் கையில் எலுமிச்சை பழ சாறு தடவி உலர விட்டு பிறகு போட்டால் மருதாணி நன்கு சிவக்கும் புருவத்தில் முடி வளர புரு...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_6099.html
மருதாணி நன்கு சிவக்க
போடும் முன் கையில் எலுமிச்சை பழ சாறு தடவி உலர விட்டு பிறகு போட்டால் மருதாணி நன்கு சிவக்கும்
புருவத்தில் முடி வளர
புருவத்தின் முடி வளர விளக்கெண்ணெயையை தினமும் இரவு உறங்குவதற்கு முன் புருவத்தில் தடவி வரவேன்டும்
இதயம் வலிமை பெற
முருங்கை பூவை சுத்தபடுத்தி அதை எண்ணெய் கலந்து அவித்து சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமை பெறும்
சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரக்க
சர்க்கரை நோயாளிகள் சிறுகீரை சூப் தினமும் சாப்பிட்டால் கணையத்தில் இன்சுலின் இயல்பாகச் சுரக்கும்.
மாதவிடாய்
மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
கர்ப்பப்பை வலுவடைய
முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்
கூந்தல் உதிரும் பிரச்னையா?
கூந்தல் உதிரும் பிரச்னை உடைய பெண்கள், சிறிதளவு வெந்தயத்தை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்ய, கூந்தல் உதிர்வது மட்டுப்படும்.
உடல் இளைக்க
தினமும் 8,9 கறிவேப்பிலை துணுக்குகளை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடல் இளைக்கும்.
Post a Comment