இஃப்தார் நோன்பு ஸ்பெஷல்!
இ ஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில் 30 நாள்கள் நோன்பிருப்பது கடமையாக்கப்பட்டுள்ளது. ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மிக ஈர...
https://pettagum.blogspot.com/2017/06/blog-post_87.html
இஸ்லாமிய
மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில் 30 நாள்கள் நோன்பிருப்பது
கடமையாக்கப்பட்டுள்ளது. ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மிக
ஈர்ப்பு... இவையே நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கம். சூரிய உதயத்துக்கு
முன்பாகவே (காலை 5 மணி வாக்கில்) நோன்பு தொடங்கிவிடும்.
சூரியன் அஸ்தமனமான பிறகு (மாலை 6 மணி வாக்கில்) நோன்பை முடித்துக்கொள்வது வழக்கம். நோன்பு முடிப்பதற்கு ‘இப்தார்’ என பெயர். இஃப்தாரில் உண்ணுவதற்கான சிறப்பு உணவுகளின் ரெசிப்பிகளை அளிக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹசீனா செய்யது.
------------------------------------------------------------------------------------------------------------------------
ஹலீம்
தேவையானவை:
வெங்காயம் - 3 (நீளவாக்கில் நறுக்கவும்)
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கப்
ஆய்ந்த புதினா இலைகள் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 6 (துண்டுகளாகக் கீறவும்)
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
அடித்த கெட்டித் தயிர் - ஒரு கப்
வெங்காயம் - 8 (நறுக்கி சூடான எண்ணெயில் பொரிக்கவும்)
நெய் - 6 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைப் பழம் – ஒன்று (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
முதலில் வேகவைக்க:
எலும்பு நீக்கிய ஆட்டு இறைச்சி - ஒரு கிலோ
பச்சை மிளகாய் - 15
இஞ்சி விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
பட்டை - ஒரு இஞ்ச் துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகு - 6
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - ஒரு கப்
இரண்டாவதாக வேகவைக்க :
உடைத்த கோதுமை - 150 கிராம்
உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் வேகவைக்க கொடுத்துள்ள பொருள்களை குக்கரில் சேர்த்து நன்றாக வேகவைத்து இறக்கவும். ஆறவிட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். பிறகு, இரண்டாவதாக வேகவைக்க கொடுத்துள்ள பொருள்களை மற்றொரு குக்கரில் சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும். ஆறிய பிறகு தனியாக விழுதாக அரைத்து எடுக்கவும்.
அடிகனமான, வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதனுடன் பாதியளவு புதினா இலைகள், இஞ்சி - பூண்டு விழுது, தயிர், மஞ்சள்தூள், மிளகுத்தூள், முதலில் வேகவைத்து அரைத்த கறி, இரண்டாவதாக வேகவைத்து அரைத்த பருப்பு சேர்த்து அடி பிடிக்காமல் நன்றாகக் கலக்கவும். மேலே நெய்யை ஊற்றி 15 நிமிடங்கள் கிளறி அடிபிடிக்காமல் மிதமான தீயில் வேகவிடவும். பொரித்த வெங்காயத்தில் பாதி அளவு எடுத்து இதனுடன் சேர்க்கவும்.
பரிமாறும் முறை:
கிண்ணத்தில் ஹலீமை ஊற்றி அதன் மேல் கொத்தமல்லித்தழை, கீறிய பச்சை மிளகாய் துண்டுகள், புதினா இலை, பொரித்த வெங்காயத்தைத் தூவி எலுமிச்சைத் துண்டுகளை வைத்து அலங்கரித்துக் கொடுக்கவும்.
சாப்பிடும் முன் இதன் மேல் எலுமிச்சைச் சாற்றை பிழிந்து சூடாகச் சுவைக்கலாம்.
குறிப்பு:
கோழி இறைச்சியைப் பயன்படுத்தியும் செய்யலாம்.
சூரியன் அஸ்தமனமான பிறகு (மாலை 6 மணி வாக்கில்) நோன்பை முடித்துக்கொள்வது வழக்கம். நோன்பு முடிப்பதற்கு ‘இப்தார்’ என பெயர். இஃப்தாரில் உண்ணுவதற்கான சிறப்பு உணவுகளின் ரெசிப்பிகளை அளிக்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஹசீனா செய்யது.
------------------------------------------------------------------------------------------------------------------------
ஹலீம்
தேவையானவை:
வெங்காயம் - 3 (நீளவாக்கில் நறுக்கவும்)
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கப்
ஆய்ந்த புதினா இலைகள் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 6 (துண்டுகளாகக் கீறவும்)
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
அடித்த கெட்டித் தயிர் - ஒரு கப்
வெங்காயம் - 8 (நறுக்கி சூடான எண்ணெயில் பொரிக்கவும்)
நெய் - 6 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைப் பழம் – ஒன்று (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
முதலில் வேகவைக்க:
எலும்பு நீக்கிய ஆட்டு இறைச்சி - ஒரு கிலோ
பச்சை மிளகாய் - 15
இஞ்சி விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
பட்டை - ஒரு இஞ்ச் துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகு - 6
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - ஒரு கப்
இரண்டாவதாக வேகவைக்க :
உடைத்த கோதுமை - 150 கிராம்
உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் வேகவைக்க கொடுத்துள்ள பொருள்களை குக்கரில் சேர்த்து நன்றாக வேகவைத்து இறக்கவும். ஆறவிட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். பிறகு, இரண்டாவதாக வேகவைக்க கொடுத்துள்ள பொருள்களை மற்றொரு குக்கரில் சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும். ஆறிய பிறகு தனியாக விழுதாக அரைத்து எடுக்கவும்.
அடிகனமான, வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதனுடன் பாதியளவு புதினா இலைகள், இஞ்சி - பூண்டு விழுது, தயிர், மஞ்சள்தூள், மிளகுத்தூள், முதலில் வேகவைத்து அரைத்த கறி, இரண்டாவதாக வேகவைத்து அரைத்த பருப்பு சேர்த்து அடி பிடிக்காமல் நன்றாகக் கலக்கவும். மேலே நெய்யை ஊற்றி 15 நிமிடங்கள் கிளறி அடிபிடிக்காமல் மிதமான தீயில் வேகவிடவும். பொரித்த வெங்காயத்தில் பாதி அளவு எடுத்து இதனுடன் சேர்க்கவும்.
பரிமாறும் முறை:
கிண்ணத்தில் ஹலீமை ஊற்றி அதன் மேல் கொத்தமல்லித்தழை, கீறிய பச்சை மிளகாய் துண்டுகள், புதினா இலை, பொரித்த வெங்காயத்தைத் தூவி எலுமிச்சைத் துண்டுகளை வைத்து அலங்கரித்துக் கொடுக்கவும்.
சாப்பிடும் முன் இதன் மேல் எலுமிச்சைச் சாற்றை பிழிந்து சூடாகச் சுவைக்கலாம்.
குறிப்பு:
கோழி இறைச்சியைப் பயன்படுத்தியும் செய்யலாம்.
Post a Comment