சிங்கப்பூர் 'சிம்ப்ளிசிட்டி': நம்மூர் அரசியல்வாதிகளுக்கு வருமா?
நம்ம ஊர் அரசியல் 'சிங்கங்களுக்கு' எல்லாம், எளிமை என்றால் என்னவென்று காட்டி உள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லுாங்.பிறந்த நாள...
https://pettagum.blogspot.com/2015/11/blog-post_27.html
இதுபோன்ற
விழாக்களை கொண்டாடும்போது, சாதாரண பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களையோ,
தேவையற்ற செலவுகளையோ, மின்சார விரயங்களையோ பற்றி இவர்கள் கிஞ்சித்தும்
கவலைப்படுவது இல்லை. ''எப்படி நடந்துகொண்டாலும் தேர்தல் வந்தால் இந்த
மக்கள் ஓட்டளித்து விடுவர்'' என்ற அசட்டு நம்பிக்கை தான் இதற்கு காரணம்.
இவர்கள் எல்லாம் சிங்கப்பூர் அரசியல்வாதிகளைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.
சிங்கப்பூர் 'சிம்ப்ளிசிட்டி':
சமீபத்தில்
நமது பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றிருந்தார். அவருக்கு விருந்து அளிக்க
விரும்பிய சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லுாங், மோடியை அழைத்து சென்றது
எங்கு தெரியுமா? சிங்கப்பூர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 'லிட்டில்
இந்தியா' என்ற பகுதிக்கு. அங்குள்ள பழமையான 'கோமள விலாஸ் ஓட்டலில் தான்
விருந்து.
பிரதமர்
செல்லும் ஓட்டல் என்றதும், ஏதோ பிரமாண்டமான ஓட்டல் என நினைத்து
விடாதீர்கள். அது ஒரு எளிமையான ஓட்டல். அங்கு சென்று லீயும் மோடியும் ஒரு
டேபிளில் அமர்ந்தனர்.
விருந்து
என்றதும் வகை வகையாய் உணவுகள் குவிக்கப்பட்டு இருக்கும் என்றும் நினைத்து
விடாதீர்கள். ஒரு தட்டில் ஐந்தாறு உளுந்த வடையை வைத்தார்கள். தொட்டுக்கொள்ள
கொஞ்சம் கெட்டிச் சட்னி வைத்தார்கள்.
மோடியும்
லீயும் ஆளுக்கு ஓரிரு வடைகளை எடுத்து, சட்னியை தொட்டுக்கொண்டு
சாப்பிட்டார்கள். அதற்குள் பேச வேண்டியதையும் பேசி விட்டார்கள். பின்னர்
கலைந்து சென்றனர். அவர்களுடன் இரு நாட்டின் மற்ற அதிகாரிகளும் அமர்ந்து
வடையை மென்று விட்டு விடை பெற்றனர்.
சாப்பாடு என்ற பெயரில் ஏராளமாக செலவு செய்து பணத்தை விரயமாக்காமல், ஆக்கப்பூர்வமாக சிங்கப்பூர் பிரதமர் செயல்பட்டுள்ளார்.
இதையெல்லாம் பார்த்த, கேள்விப்பட்ட நம்மூர் மக்களால் பெருமூச்சு தான் விட முடிந்தது.
இந்த எளிமை இந்தியாவுக்கு என்று வரும்?
2 comments
கலக்கிட்டாங்க...
Thanks for your comment. By pettagum A.S. Mohamed Ali
Post a Comment